- இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும் (2)
- கவிதை 2
- ஐக்கூ கவிதைகள்
- நாம் நாமாக
- வேண்டாம் புத்தாண்டே..!
- வைரமுத்துக்களை விழுங்கிய ஒரு சுனாமி.
- பயிர்
- வாழ்க்கை என்பது!….
- கீதாஞ்சலி (11) – என் பிரார்த்தனை (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- பிணக்கு
- மரம் பேசிய மவுன மொழி !
- கவிக்கட்டு 44
- பெரியபுராணம் — 26
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 17 – தடிவீரசாமி கதை
- ஓவியப் பக்கம் – பதிமூன்று- ராபர்ட் ரோஷன்பர்க் – பரீட்சார்த்த ஓவிய முயற்சிகளின் சுவாரஸிய களம்
- உயர் பாவை 4
- டொக்டர் நடேசனின் படைப்பான வண்ணாத்திக்குளம் – குறுநாவல் விமர்சனக் கூட்டமும் விமர்சனமும்
- பெருந்துளியொன்று
- பிணம் செய்த கடல்
- நாலேகால் டாலர்
- நீலக்கடல்-(தொடர்)- அத்தியாயம் -54
- சு ன ா மி
- அறிவியல் சிறுகதை வரிசை 9 – தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு
- தை பிறந்தால் “வலி ‘ பிறக்கும்….!
- பேரலை
- சுனாமி
- பழைய மின்சாரம்
- கதவைத் தட்டிய கடலலைகள்
- காதல்
- ஃபிடலுக்கு ஒரு பாடல் – செ குவேரா
- அவளைப் பார்த்தேன் – அன்றொரு நாள் (மூலம் :சித்தலிங்கையா-கன்னடம்)
- கல்லா இரும்பா ?
- பெண் விடுதலைபற்றி…பகவான் ரஜனீஷ்
- ஆயிரம் நதிகளாய்….(மூலம் :சித்தலிங்கையா – கன்னடம்)
- வந்தால் சொல்லுங்கள்
- விடுபட்டவைகள்-5 கவசவாகனம்
புதியமாதவி

பொங்கல்..
என் நினைவுகளின் இனிமையில்
இன்னும் மிச்சமாய்
இனிக்கிறது பொங்கல்
தமிழனின் திருநாளை
தமிழ்மண்ணில் தரிசிக்க
நடக்கிறது கால்கள்
செம்மண் கோலத்தில்
சிரித்த பூசணிப்பூக்கள்
கரும்புத் தோட்டங்கள்
பனங்கிழங்குகள்
மஞ்சள் மாவிலை
வாழையிலையில் வரிசையாய் கிழங்குகள்
புத்தரிசி புதுப்பானை
எதைஎதையோ தேடி
அலைகின்றேன் தமிழ்மண்ணில்..
‘பொங்கல் தமிழர் திருநாள் ‘
ஒலிபெருக்கி முழக்கங்கள்
யார் யாரோ வருகின்றார்
பட்டிமன்றங்கள்
பார் அதிரும் முழக்கங்கள்
எட்டிப்பார்க்கின்றேன்
என் பொங்கல் இங்கில்லை.
நதிகளை நம்பி
காத்திருந்த ஓடைகள்
வயல்களைத் தேடி
வாழ்க்கையை முடிக்கின்றன.
விதைநெல்லைப் பொங்கலிட்ட
வெங்கலப்பானைகள்
கடைநெல்லுக்காக
காத்திருக்கின்றன.
கடைவீதியில்
தவணைமுறையில்
தமிழனின் கனவுகள்
விற்கப்படுகின்றன.
சின்னத்திரையில்
விளம்பரத்தில்
சிரிக்கிறது
‘பொங்கள் வால்ட்து ‘.
பொங்கல் வருகிறது! போகிறது!
தமிழன் திருநாள் வருகின்றதா ?
வந்தால் சொல்லுங்கள்
அன்று-
வாழ்த்துரைக்கும் என்கவிதை.
—-
அன்புடன்,
புதியமாதவி, மும்பை.