- இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும் (2)
- நாலேகால் டாலர்
- நீலக்கடல்-(தொடர்)- அத்தியாயம் -54
- சு ன ா மி
- அறிவியல் சிறுகதை வரிசை 9 – தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு
- தை பிறந்தால் “வலி ‘ பிறக்கும்….!
- பேரலை
- சுனாமி
- பழைய மின்சாரம்
- கதவைத் தட்டிய கடலலைகள்
- காதல்
- ஃபிடலுக்கு ஒரு பாடல் – செ குவேரா
- அவளைப் பார்த்தேன் – அன்றொரு நாள் (மூலம் :சித்தலிங்கையா-கன்னடம்)
- கல்லா இரும்பா ?
- பெண் விடுதலைபற்றி…பகவான் ரஜனீஷ்
- ஆயிரம் நதிகளாய்….(மூலம் :சித்தலிங்கையா – கன்னடம்)
- வந்தால் சொல்லுங்கள்
- பிணம் செய்த கடல்
- பெருந்துளியொன்று
- கவிதை 2
- ஐக்கூ கவிதைகள்
- நாம் நாமாக
- வேண்டாம் புத்தாண்டே..!
- வைரமுத்துக்களை விழுங்கிய ஒரு சுனாமி.
- பயிர்
- வாழ்க்கை என்பது!….
- கீதாஞ்சலி (11) – என் பிரார்த்தனை (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- பிணக்கு
- மரம் பேசிய மவுன மொழி !
- கவிக்கட்டு 44
- பெரியபுராணம் — 26
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 17 – தடிவீரசாமி கதை
- ஓவியப் பக்கம் – பதிமூன்று- ராபர்ட் ரோஷன்பர்க் – பரீட்சார்த்த ஓவிய முயற்சிகளின் சுவாரஸிய களம்
- உயர் பாவை 4
- டொக்டர் நடேசனின் படைப்பான வண்ணாத்திக்குளம் – குறுநாவல் விமர்சனக் கூட்டமும் விமர்சனமும்
- விடுபட்டவைகள்-5 கவசவாகனம்
தமிழாக்கம் : புதுவை ஞானம்.

சூரியனையும் சந்திரனையும்
சிறையிலடைத்தனர்…
மறக்கமுடியாத அந்த
கொலை நடந்த நாளில்.
அவளது குரலைப் பறித்தனர்
தேசியக் கொடியால்
தொண்டையை அடைத்து-
ஒரு…
பழத்தைக் கவ்வுவது போல்
அவளைக் கவ்வினர், காடையர்.
அவர்கள் முகத்தில்
காறித்துப்ப விழைந்தாள்-
ஆனால்…
முகமே இல்லை அவர்களுக்கென்று,
ஒரு முகமே இல்லை.
சங்கிலிகள் தாங்கிய
எத்தர்களின்
பலியாகிப் போனாள்-
எழுகடல்களும்
உள்ளே இழுத்தது போல்.
வலையில் சிக்கிய
மீனாய்த் துடித்தும்
அவர்களின்
தீவட்டி வெளிச்சத்தில்
மறைந்து போனாள்.
அவளது கண்ணீர்
ஆறாய்ப் பெருகியும்-
யாருடைய தாகத்தையும்
தீர்க்க முடியவில்லை
கரைகள் நெடுகிலும்
அவளது சதையும் உதிரமும்
கந்தல் துண்டுகளாய் சிதறின.
இரும்புக் கரங்களில்
விழுந்து நொறுங்கியது-
உதிரம் சிந்தி
துவண்டு விழுந்தது-
கொடி போன்ற
அவளது மென்னுடல்.
அவளது விழிகளைப்
பகடைக் காயாக்கி
சூதாட்டம் நடத்தினர்
இரவின் அரக்கர்கள்.
குடித்து மயங்கினர்
அவளது அணிகலன்களை விற்றுக்
கிடைத்த பணத்தில்-
கசக்கி எறிந்தனர்
மலரொத்த அவளது உடலின்
ஒவ்வொரு இதழையும்
தூக்கிச் சென்றனர் எங்கோ
எங்கென்று…
கடவுளுக்குத்தான் தெரியும் ‘
ஒரு நாள்
அவளைக் கண்ணாடியில் பார்த்தேன்–
என்னையே தான் நான் கண்டேன்.
பாம்புகள் படம் விரித்தன
அவளது முகத்தில்-
பளபளக்கும்
வாட்கள் முளைத்தன-
குழிந்த கண்களிலிருந்து.
அவை நீண்டிருந்தன
வான் முட்டும் அளவுக்கு ‘
****
(ஆங்கிலம் வழியாகத் தமிழில்)