- இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும் (2)
- நாலேகால் டாலர்
- நீலக்கடல்-(தொடர்)- அத்தியாயம் -54
- சு ன ா மி
- அறிவியல் சிறுகதை வரிசை 9 – தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு
- தை பிறந்தால் “வலி ‘ பிறக்கும்….!
- பேரலை
- சுனாமி
- பழைய மின்சாரம்
- கதவைத் தட்டிய கடலலைகள்
- காதல்
- ஃபிடலுக்கு ஒரு பாடல் – செ குவேரா
- அவளைப் பார்த்தேன் – அன்றொரு நாள் (மூலம் :சித்தலிங்கையா-கன்னடம்)
- கல்லா இரும்பா ?
- பெண் விடுதலைபற்றி…பகவான் ரஜனீஷ்
- ஆயிரம் நதிகளாய்….(மூலம் :சித்தலிங்கையா – கன்னடம்)
- வந்தால் சொல்லுங்கள்
- பிணம் செய்த கடல்
- பெருந்துளியொன்று
- கவிதை 2
- ஐக்கூ கவிதைகள்
- நாம் நாமாக
- வேண்டாம் புத்தாண்டே..!
- வைரமுத்துக்களை விழுங்கிய ஒரு சுனாமி.
- பயிர்
- வாழ்க்கை என்பது!….
- கீதாஞ்சலி (11) – என் பிரார்த்தனை (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- பிணக்கு
- மரம் பேசிய மவுன மொழி !
- கவிக்கட்டு 44
- பெரியபுராணம் — 26
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 17 – தடிவீரசாமி கதை
- ஓவியப் பக்கம் – பதிமூன்று- ராபர்ட் ரோஷன்பர்க் – பரீட்சார்த்த ஓவிய முயற்சிகளின் சுவாரஸிய களம்
- உயர் பாவை 4
- டொக்டர் நடேசனின் படைப்பான வண்ணாத்திக்குளம் – குறுநாவல் விமர்சனக் கூட்டமும் விமர்சனமும்
- விடுபட்டவைகள்-5 கவசவாகனம்
தமிழாக்கம் : புதுவை ஞானம்.

விடியலை அறிவிக்கும் வீரமிக்க தூதுவனே ‘
அமைதி குலுங்கும் அகன்ற சாலைகளினூடே
வந்து கொண்டிருக்கிறோம்….
நீ நேசிக்கும் பசிய தீவினை விடுவிக்க ‘
மார்ட்டியினின் புரட்சிக் கனலை
விழிகளிலே தேக்கி வந்து கொண்டிருக்கிறோம் ‘
அடிமைத் தளையென்னும் அவமானம் தகர்த்தெறிய
‘வெற்றி அல்லது வீர மரணம் ‘ என வெஞ்சூளுரைத்து
விரைவாய் வருகின்றோம் ‘
உன்னுடைய முதல் வேட்டினிலே…
கன்னித்துயில் கலைந்து காடு விழித்தெழும் போதினிலே
அடுக்கடுக்காய் வேட்டோசை எழும்…எங்களை
உன் பக்கத்தில் காண்பாய்.
‘நிலம் – நீதி–உரிமை–உணவு ‘
உன் அறை கூவல் காற்றில் மோதித்தெரிக்கையில்
கூட்டுக்குரலெழும்பும்…எங்களை
உன் பக்கத்தில் காண்பாய் ‘
வேட்டையின் முடிவினிலே
கொடுங்கோன்மையின் புரையோடிய அவயங்களை
அறுவைச் சிகிச்சையால் அறுத்தெரியும் போது
பஞ்சுடன் நிற்கும் தாதியாய் – எங்களை
உன் பக்கத்தில் காண்பாய் ‘
விடுதலை ஈட்டிகள் விளைவித்த காயத்தை – அந்த
ராட்சத மிருகங்கள் நக்கியழும் போது
கனவுகள் நிறைந்த இதயத்தோடு – எங்களை
உன் பக்கத்தில் காண்பாய்.
மெடல்களும் ஆயுதங்களும் மேனியெங்கும் இருந்தாலும்
ஈக்களின் கூட்டமே அந்த ஈனர்கள் கூட்டம்.
வாளை மழுங்க வைக்கும் எங்கள் வைர நெஞ்சங்கள்
ஊளை ஈக்கள் முன்னே உரம் குன்றிப் போய்விடுமோ ?
நாங்கள்
அவர்களது துப்பாக்கிகளை ரவைகளைக்
குன்றுகளைக் கைப்பற்றுவோம்…அவ்வளவே.
ஒரு கால்….முன்னணியில்
எதிரியின் குண்டுகள் எங்களைச் சில்லிட்டுப் போக வைத்தால்
உன்னுடைய ‘க்யூபன் ‘ கண்ணீர்த்துளிகளால்
எங்கள் எலும்புகளை மூடு…
அது போதும்.
ஏனெனில்
அமெரிக்க சரித்திரமே
எலும்புகளால் நிணத்தால்
கண்ணீர் சுதை கொண்டு
கட்டப்பட்டது தான் ‘
****
-Che-Guerra – 1956 -Mexico The speaches and writtings of CHE.