- இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும் (2)
- நாலேகால் டாலர்
- நீலக்கடல்-(தொடர்)- அத்தியாயம் -54
- சு ன ா மி
- அறிவியல் சிறுகதை வரிசை 9 – தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு
- தை பிறந்தால் “வலி ‘ பிறக்கும்….!
- பேரலை
- சுனாமி
- பழைய மின்சாரம்
- கதவைத் தட்டிய கடலலைகள்
- காதல்
- ஃபிடலுக்கு ஒரு பாடல் – செ குவேரா
- அவளைப் பார்த்தேன் – அன்றொரு நாள் (மூலம் :சித்தலிங்கையா-கன்னடம்)
- கல்லா இரும்பா ?
- பெண் விடுதலைபற்றி…பகவான் ரஜனீஷ்
- ஆயிரம் நதிகளாய்….(மூலம் :சித்தலிங்கையா – கன்னடம்)
- வந்தால் சொல்லுங்கள்
- பிணம் செய்த கடல்
- பெருந்துளியொன்று
- கவிதை 2
- ஐக்கூ கவிதைகள்
- நாம் நாமாக
- வேண்டாம் புத்தாண்டே..!
- வைரமுத்துக்களை விழுங்கிய ஒரு சுனாமி.
- பயிர்
- வாழ்க்கை என்பது!….
- கீதாஞ்சலி (11) – என் பிரார்த்தனை (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- பிணக்கு
- மரம் பேசிய மவுன மொழி !
- கவிக்கட்டு 44
- பெரியபுராணம் — 26
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 17 – தடிவீரசாமி கதை
- ஓவியப் பக்கம் – பதிமூன்று- ராபர்ட் ரோஷன்பர்க் – பரீட்சார்த்த ஓவிய முயற்சிகளின் சுவாரஸிய களம்
- உயர் பாவை 4
- டொக்டர் நடேசனின் படைப்பான வண்ணாத்திக்குளம் – குறுநாவல் விமர்சனக் கூட்டமும் விமர்சனமும்
- விடுபட்டவைகள்-5 கவசவாகனம்
சத்தி சக்திதாசன்

விளையாடாதே !
கண்ணீரோடு வாழ்கின்றார்
காலமெலாம் வாடுகிறார்
காத்திருந்து ஏங்குகிறார்
கருணை தேடி ஓடுகிறார் – அவரோடு
விளையாடாதே
நேரத்தையே சாடுகிறார்
நேற்றையெல்லாம் ஏசுகிறார்
நேர்மையாக உழைக்கின்றார்
நேசத்தையே விதைக்கின்றார் – அவரோடு
விளையாடாதே
மனதையே பூஜிக்கிறார்
மனிதத்தைப் போற்றுகிறார்
மன்னித்தே வாழுகிறார்
மயக்கத்தோடு தூங்குகிறார் – அவரோடு
விளையாடாதே
வேதனையோடு உழல்கின்றார்
வேதங்களை மதிக்கின்றார்
வேள்வியாக வாழுகின்றார்
வேண்டுவதை இழக்கின்றார் – அவரோடு
விளையாடாதே
நாளைகை நம்புகிறார்
நாட்டையே காக்கிறார்
நாணயத்தை வாழ்த்துகிறார்
நமக்காக தேய்கின்றார் – அவரோடு
விளையடதே
தோல்விகளை ஏற்கின்றார்
தோழர்களை தாங்குகிறார்
தோன்றியதைச் சொல்கின்றார்
தோள்களை நிமிர்த்துகிறார் – அவரோடு
விளையாடாதே
****
பொங்குது மனது
புதிதாய்ப் புலர்ந்த வருடம் பூக்கும்போதே புயலாக மாறியதே
புண்ணாகிப் போன இதயம் நிச்சயமாய்ப் பொங்குது மனது
தைமகள் வருவதும் தரணியெலாம் செழிப்பதும் பழைய கதையானதுவே
தையல்கள் பலரின் வாழ்வு திசைமாறிப் போனதனினால் பொங்குது மனது
பால்மணம் மாறாச் சிறார்கள் மாறினரே அனாதைகளாய் சுனாமியினால்
பார்த்திருக்கும் விழிகளெல்லாம் கண்ணீர்க்கடலாக பொங்குது மனது
களித்திருந்த காதல் பெண்கள் ஒரு கணத்தில் கைம்பெண்கள் ஆகினரே
கசங்கிப் பிழிந்தது துயர் இதயத்தினை பொங்குது மனது
வியர்வை சிந்தி உழைத்த என் கடலோரத் தொழிலாளி கடலாகிப் போனாரே
விடிவு இனி அவர்க்கு எந்தத் தையில் வரும் , பொங்குது மனது
பொங்கிப் பொங்கி நாம் மகிழ்ந்திருக்கும் வேளையல்ல நண்பர்களே
போன உறவுகளின் ஆத்மாக்கள் சாந்திக்க பொங்கட்டும் உம்மனது
****
sathnel.sakthithasan@bt.com