- இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும் (2)
- நாலேகால் டாலர்
- நீலக்கடல்-(தொடர்)- அத்தியாயம் -54
- சு ன ா மி
- அறிவியல் சிறுகதை வரிசை 9 – தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு
- தை பிறந்தால் “வலி ‘ பிறக்கும்….!
- பேரலை
- சுனாமி
- பழைய மின்சாரம்
- கதவைத் தட்டிய கடலலைகள்
- காதல்
- ஃபிடலுக்கு ஒரு பாடல் – செ குவேரா
- அவளைப் பார்த்தேன் – அன்றொரு நாள் (மூலம் :சித்தலிங்கையா-கன்னடம்)
- கல்லா இரும்பா ?
- பெண் விடுதலைபற்றி…பகவான் ரஜனீஷ்
- ஆயிரம் நதிகளாய்….(மூலம் :சித்தலிங்கையா – கன்னடம்)
- வந்தால் சொல்லுங்கள்
- பிணம் செய்த கடல்
- பெருந்துளியொன்று
- கவிதை 2
- ஐக்கூ கவிதைகள்
- நாம் நாமாக
- வேண்டாம் புத்தாண்டே..!
- வைரமுத்துக்களை விழுங்கிய ஒரு சுனாமி.
- பயிர்
- வாழ்க்கை என்பது!….
- கீதாஞ்சலி (11) – என் பிரார்த்தனை (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- பிணக்கு
- மரம் பேசிய மவுன மொழி !
- கவிக்கட்டு 44
- பெரியபுராணம் — 26
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 17 – தடிவீரசாமி கதை
- ஓவியப் பக்கம் – பதிமூன்று- ராபர்ட் ரோஷன்பர்க் – பரீட்சார்த்த ஓவிய முயற்சிகளின் சுவாரஸிய களம்
- உயர் பாவை 4
- டொக்டர் நடேசனின் படைப்பான வண்ணாத்திக்குளம் – குறுநாவல் விமர்சனக் கூட்டமும் விமர்சனமும்
- விடுபட்டவைகள்-5 கவசவாகனம்
ஞானம்

சுழலும் சுக்கான்
குமுறும் கடலில்
பெரும்புனல் வெளியில்.
சுழலும் சுக்கான்
அலையின் போக்கில்
சுழலின் போக்கில்
மேற் செல்லும் படகு
இலக்கை நோக்கி.
சுக்கான் இன்றேல்..
சுக்கு நூறாகும்
அக்கு வேறு ஆணிவேறாகும்
இலக்கெங்கோ தொடுவானமாக.
சுழல்தல் நெகிழ்தல்
பச்சை மண்ணாய்
மக்கள் வாழ்க்கையை
முற்றய்ப் புரிதல்
தத்துவத் தணலில்
உறுதியாய் வேகுதல்
மக்களுக்காகவே
வாழ்வின் மேனிலைக்காகவே.
உறுதியானது
கருங்கல்லும் இரும்புமே
கட்டிடப் பொருட்களில்.
கோட்டை கொத்தளங்கள்
கொள்ளை கொள்ளும்
அற்புதச் சிலைகள்
கல்லில் தான் – இரும்பில் தான்
ஆனாலும் தோழனே ‘
இதமாய் வாழ மக்கள்
மண்ணாலும் மரத்தாலுமே
இல்லம் அமைத்தார்கள்
கோட்டைக்கும்
உள்ளும் – வெளியும்.
இளகும் சுதையுடன்
கல்லும் இரும்பும்
கலந்தால் இல்லம்.
இன்றேல்
ஓர் நினைவுச் சின்னம்.
மக்களைப் -புரிய
வாழ்வினைப் புரிய
மேனிலை சேர்க்கவோர்
கட்சியா ?
ஏதோவொரு
இறுகிய
தத்துவப்புரிதலின்
அல்லது
புரியாமையின்
நினைவுச் சின்னமா ?
என்
உறுதியான தோழனே
பகுதியைத் தேடி முழுமையையும்
முழுமையைத் தேடி பகுதியையும்
பக்குவமாய்க் கோட்டைவிட்டு
பதறிப் போய்க் கேட்கிறேன்
நீ….
கல்லா
இரும்பா ?
****