- தொலைந்து போன காட்சிகள்
- இலையுதிர்காலம்….
- அன்பு நண்பா !
- கீதாஞ்சலி (5) இசைப் பாடகன்
- பெரிய புராணம் – 19 ( திருநீலகண்ட நாயனார் புராணம் )
- மின்சாரத்திற்கு மாற்று வழியிருக்கு; மாட்டுவண்டி தேவையில்லை!
- திண்ணையும் மரத்தடியும் நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15, 2005
- தமிழ் அரசியல்
- மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள்
- பாரதப் பெண்களுக்கு “ஐஸ்” வைக்கிறார் குருமூர்த்தி!
- தமிழின் மறுமலர்ச்சி – 7
- வாரபலன் நவம்பர் 25, 2004(ஜெயேந்திரர் சோதனை, சர்தார்ஜி சாதனை, குஞ்ஞாலிக்குட்டி வேதனை, திருமேனி ரோதனை)
- வையாபுரிப்பிள்ளை குறித்து
- நன்றி நவில ஓர் நாள்.
- கவனிக்கவும்!
- தமிழ் அளவைகள் – 1
- மெய்மையின் மயக்கம்-27
- தமிழ் அளவைகள் -2
- நரகல் வாக்கு
- இந்த ஆண்டின் நாயகன்
- நீ வருவாயென..
- இது என்னுடைய வெள்ளிக்கிழமை
- பர்ஸாத்
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் -47
- அறிவியல் புனைகதை வரிசை.2- இங்கே, இங்கேயே…
- அலமாரி
- அறிவு
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 4. நாம் யார் ?
- குழந்தையிடம் ஒரு வேண்டுகோள்
- SMS கவிதைகள்
- ஆண்மையை எப்போது
- சொல்லத்தான் நினைகின்றேன்
- பழைய சைக்கிள் டயர்
- தீண்டத் தகாதவர்கள் யாருமற்ற உலகம்
- ஆகாயப்பறவை.
- சிதிலம்
- சொட்டாங்கல்
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 11 கட்டிலவதானம் கதை
விஜயமோகனச்செல்வி செல்வரத்தினம்

இலையுதிர்காலம் மீண்டும்
துளிர்பிற்கான ஆரம்பம்!..
மனித வாழ்க்கையின் வட்டத்தை
இங்கு மரங்கள் கற்பிக்கின்றன!
குறுகியது வாழ்க்கை என்று
உணர்ந்து வருந்தாமல்!….
வசந்தத்தில் துளிராகி பூவாகி
காயோடு, கனியாகி என் கடன்
பணி செய்து கிடப்பதேயென்று
மரம் சொல்லும் பாடம்
அறி மனிதா!…
பட்டுப்போய் நிற்கின்றோம் என்று
அவை வெட்கப்பட்டுநிற்பதில்லை!
பழுத்து விழும் இலை கூட
அதே மரத்திற்கு உரம்
இலைசுமந்த கிளைகள் இனி
பனி சுமக்கும்! எந்த
சுமையும் நிலையில்லை என்பதை
உன் கண்முன்னே அவை
நிலைநிறுத்தும்!
பாரம் தாங்காமல் கிளை
வளையும்! தழுவி நின்ற இலை
நழுவும்! ஆனாலும் நம்பிக்கை
எனும் மூல வேரை இழப்பதில்லை
மரம்!..ஆகவே! ‘இலையுதிர்காலம்
மீண்டும் துளிர்பிற்கான ஆரம்பம்…
vijiselvaratnam@yahoo.ca
உங்கள்,
விஜயமோகனச்செல்வி செல்வரத்தினம்