- தொலைந்து போன காட்சிகள்
- நீ வருவாயென..
- இது என்னுடைய வெள்ளிக்கிழமை
- பர்ஸாத்
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் -47
- அறிவியல் புனைகதை வரிசை.2- இங்கே, இங்கேயே…
- அலமாரி
- அறிவு
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 4. நாம் யார் ?
- குழந்தையிடம் ஒரு வேண்டுகோள்
- SMS கவிதைகள்
- ஆண்மையை எப்போது
- சொல்லத்தான் நினைகின்றேன்
- பழைய சைக்கிள் டயர்
- தீண்டத் தகாதவர்கள் யாருமற்ற உலகம்
- ஆகாயப்பறவை.
- சிதிலம்
- சொட்டாங்கல்
- இந்த ஆண்டின் நாயகன்
- நரகல் வாக்கு
- இலையுதிர்காலம்….
- அன்பு நண்பா !
- கீதாஞ்சலி (5) இசைப் பாடகன்
- பெரிய புராணம் – 19 ( திருநீலகண்ட நாயனார் புராணம் )
- மின்சாரத்திற்கு மாற்று வழியிருக்கு; மாட்டுவண்டி தேவையில்லை!
- திண்ணையும் மரத்தடியும் நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15, 2005
- தமிழ் அரசியல்
- மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள்
- பாரதப் பெண்களுக்கு “ஐஸ்” வைக்கிறார் குருமூர்த்தி!
- தமிழின் மறுமலர்ச்சி – 7
- வாரபலன் நவம்பர் 25, 2004(ஜெயேந்திரர் சோதனை, சர்தார்ஜி சாதனை, குஞ்ஞாலிக்குட்டி வேதனை, திருமேனி ரோதனை)
- வையாபுரிப்பிள்ளை குறித்து
- நன்றி நவில ஓர் நாள்.
- கவனிக்கவும்!
- தமிழ் அளவைகள் – 1
- மெய்மையின் மயக்கம்-27
- தமிழ் அளவைகள் -2
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 11 கட்டிலவதானம் கதை
சத்தி சக்திதாசன்

நண்பா உன் மடல் கண்டேன்
நலமறிந்து மகிழ்வுற்றேன்
தேவைகளைத்
தேடித் தேடி
தேய்ந்து போன பாதங்களுடன்
தேங்கி நீ
துவண்டு விட்டாய் என்றறிந்தேன்
ஏன் நண்பா ?
ஏக்கங்களை தூக்கியெறியும்
ஏற்றம் இன்னும் காணவில்லையா ?
சமுதாய மாற்றம் வேண்டி
சத்தம் போட்ட
சந்தர்ப்பங்களை மறந்தது
சார்ந்திருந்தோரின் சங்கற்பமா சொல் நண்பா ?
நிம்மதி ஒன்றேதான் நம் வாழ்வில்
நிச்சயமான உழைப்பு
நீயும் நானும் அன்றுரைத்த
நீண்டகால லட்சியம்
நீர்மேற் குமிழியாயிற்றா ?
உண்மையொன்று நானும் தான்
உணர்ந்து கொண்டேன்
வாழ்க்கைத் திட்டங்கள்
வளமாய் நாம் ஆயிரம் தீட்டலாம் – அவை
வாய்ப்பது ஓரிருவர்
வாழ்வில் மட்டுமே
நாம் போகும்பாதை
நன்றாய் அறிந்தேதான் போனாலும்
நடுவினிலே தடைகள்
நடைமாறி
நாமும் வேறுவழி சென்றிருப்போம்
நானிருக்கும் உலகும்
நாளும் வேதனைதான்
நானொன்று நினைக்க
நடக்காது என தானொன்று நினக்கும்
நடக்கும் இந்தக் காலம்
ஓய்வுனக்கு தேவைதான்
ஓயாமல் உழைத்தவனே
மறுபடியும் எழுந்துவிடு
மறக்காதே பயணத்தை
மனிதர்கள் எனும் போர்வையில்
மாயர்கள் வாழும் உலகில்
மனிதத்தைக் காக்க
மனிதத்துவம் நிறைந்த உன் தேவை உண்டு
பயணத்தில்
பாதிதூரம் கடந்தபின்
பதில் ஒன்று எழுதிவிடு
பார்த்திருக்கும் என் விழிகள்
பயணத்தில் ஓரடி கூட வரமுடியா
பாதமிழந்த இம்மனிதன் ….
*
sathnel.sakthithasan@bt.com