- தொலைந்து போன காட்சிகள்
- நீ வருவாயென..
- இது என்னுடைய வெள்ளிக்கிழமை
- பர்ஸாத்
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் -47
- அறிவியல் புனைகதை வரிசை.2- இங்கே, இங்கேயே…
- அலமாரி
- அறிவு
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 4. நாம் யார் ?
- குழந்தையிடம் ஒரு வேண்டுகோள்
- SMS கவிதைகள்
- ஆண்மையை எப்போது
- சொல்லத்தான் நினைகின்றேன்
- பழைய சைக்கிள் டயர்
- தீண்டத் தகாதவர்கள் யாருமற்ற உலகம்
- ஆகாயப்பறவை.
- சிதிலம்
- சொட்டாங்கல்
- இந்த ஆண்டின் நாயகன்
- நரகல் வாக்கு
- இலையுதிர்காலம்….
- அன்பு நண்பா !
- கீதாஞ்சலி (5) இசைப் பாடகன்
- பெரிய புராணம் – 19 ( திருநீலகண்ட நாயனார் புராணம் )
- மின்சாரத்திற்கு மாற்று வழியிருக்கு; மாட்டுவண்டி தேவையில்லை!
- திண்ணையும் மரத்தடியும் நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15, 2005
- தமிழ் அரசியல்
- மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள்
- பாரதப் பெண்களுக்கு “ஐஸ்” வைக்கிறார் குருமூர்த்தி!
- தமிழின் மறுமலர்ச்சி – 7
- வாரபலன் நவம்பர் 25, 2004(ஜெயேந்திரர் சோதனை, சர்தார்ஜி சாதனை, குஞ்ஞாலிக்குட்டி வேதனை, திருமேனி ரோதனை)
- வையாபுரிப்பிள்ளை குறித்து
- நன்றி நவில ஓர் நாள்.
- கவனிக்கவும்!
- தமிழ் அளவைகள் – 1
- மெய்மையின் மயக்கம்-27
- தமிழ் அளவைகள் -2
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 11 கட்டிலவதானம் கதை
புதியமாதவி, மும்பை.

உங்கள் நிழல்களின் நிழலில்
நிற்பதாலேயே
உங்கள் நிழல்களையே
நிஜம் என்று
வேர்கள் சொல்லுமா ?
உங்கள் கண்ணாடி அணிந்து
பார்ப்பதாலேயே
உங்கள் கண்ணாடியே
கண்கள் என்று
முகம் சொல்லுமா ?
உங்கள் துண்டுகள் மாலையாய்
விழுவதாலேயே
உங்கள் துண்டுகளையே
மலர் என்று
மண் சொல்லுமா ?
உங்கள் கைகளை கோத்துநான்
ஆடுவதாலேயே
உங்கள் கைகளே
என் தோள்கள்
அசைக்க முடியுமா ?
உங்கள் கதைகேட்டு
ரசிப்பதாலேயே
என்கதையில்
உங்களையே
எழுத முடியுமா ?
உங்கள் முற்றத்தில்
தெரிவது
என் ஆகாயமல்ல.
ஆகாயப்பறவையை
அடைத்து வைக்க முடியாது.
உங்களால்-
வெட்டப்பட்ட சிறகுகள்
கட்டப்பட்ட கால்கள்.
வலி மறக்க வைக்கும்
வலி நிவாரணிகளை
இனி தேவையில்லை.
வலியுடன் பறப்பதே
என் வலிமையின் ஆயுதம்.
பறக்கப் போகிறேன்.
காலமெல்லாம்
ஆகாயத்து பறவையை
அடைத்து வைக்க முடியாது.
puthiyamaadhavi@hotmail.com