- தொலைந்து போன காட்சிகள்
- நீ வருவாயென..
- இது என்னுடைய வெள்ளிக்கிழமை
- பர்ஸாத்
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் -47
- அறிவியல் புனைகதை வரிசை.2- இங்கே, இங்கேயே…
- அலமாரி
- அறிவு
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 4. நாம் யார் ?
- குழந்தையிடம் ஒரு வேண்டுகோள்
- SMS கவிதைகள்
- ஆண்மையை எப்போது
- சொல்லத்தான் நினைகின்றேன்
- பழைய சைக்கிள் டயர்
- தீண்டத் தகாதவர்கள் யாருமற்ற உலகம்
- ஆகாயப்பறவை.
- சிதிலம்
- சொட்டாங்கல்
- இந்த ஆண்டின் நாயகன்
- நரகல் வாக்கு
- இலையுதிர்காலம்….
- அன்பு நண்பா !
- கீதாஞ்சலி (5) இசைப் பாடகன்
- பெரிய புராணம் – 19 ( திருநீலகண்ட நாயனார் புராணம் )
- மின்சாரத்திற்கு மாற்று வழியிருக்கு; மாட்டுவண்டி தேவையில்லை!
- திண்ணையும் மரத்தடியும் நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15, 2005
- தமிழ் அரசியல்
- மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள்
- பாரதப் பெண்களுக்கு “ஐஸ்” வைக்கிறார் குருமூர்த்தி!
- தமிழின் மறுமலர்ச்சி – 7
- வாரபலன் நவம்பர் 25, 2004(ஜெயேந்திரர் சோதனை, சர்தார்ஜி சாதனை, குஞ்ஞாலிக்குட்டி வேதனை, திருமேனி ரோதனை)
- வையாபுரிப்பிள்ளை குறித்து
- நன்றி நவில ஓர் நாள்.
- கவனிக்கவும்!
- தமிழ் அளவைகள் – 1
- மெய்மையின் மயக்கம்-27
- தமிழ் அளவைகள் -2
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 11 கட்டிலவதானம் கதை
அருண் கொலட்கர் மொழியாக்கம் இரா.முருகன்

மாருதியின் தலைக்குமேல்
கூரை சரிந்து கிடக்கிறது.
யாருக்கும் கவலையில்லை.
எல்லோரையும் விட, மாருதிக்கே.
அவருக்குக் கோவில்
அப்படி இருந்தால்தான் பிடிக்கும் போல.
சொறிநாய் ஒன்று
தனக்கும் குட்டிகளுக்கும்
இடிபாடுகள் இடையே
இடம் பிடித்திருக்கிறது.
அதற்குக் கோவில்
அப்படி இருந்தால்தான் பிடிக்கும் போல.
உடைந்த ஓடுகள் சிதறிய
வாசலுக்கு அப்புறம் இருந்து
நாய் உங்களை ஜாக்கிரதையாகப்
பார்க்கிறது. நாய்க் குட்டிகள்
தாய்மேல் உருண்டு விளையாடுகின்றன.
அவற்றுக்குக் கோவில்
அப்படி இருந்தால்தான் பிடிக்கும் போல.
காது மடல் கருப்பான நாய்க்குட்டி
கொஞ்சம் எட்ட ஓடுகிறது.
அதன் காலடியில்
ஓடு அதிர்கிறது.
சரிந்து விழுந்த உத்திரத்தின்
அடியிலிருந்து எழ முடியாத
உடைந்த உண்டியல் பக்கம்
சாண வண்டு நடுங்கி மறைய
அந்தச் சத்தமே போதும்.
இப்போது கோவில் இல்லைதான்.
என்றாலும், இது கடவுளின் வீடு.
அருண் கொலட்கர் – ஜெஜூரி தொகுப்பு – Heart of Ruin
மொழியாக்கம் இரா.முருகன் நவம்பர் ’04