- நெஞ்சு பொறுக்குதில்லையே…
- www.மனிதம்.com
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -1 (மரணம் விடும் அழைப்பு)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 49 << கடற் புதிர்கள் >>
- உன்னதம் – ஆகஸ்டு 2009 இதழ்
- என். விநாயக முருகன் கவிதைகள்
- PURAVANKARA Presents “BRIEF CANDLE”
- சமஸ்க்ருதம் பற்றி அறிய முயற்சிக்கவேண்டும்
- ஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..
- முதல் முதலாய்த் தோற்ற நாள்
- வேத வனம் –விருட்சம் 47
- ஒலிகளாலான உலகு (நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)
- மழை
- குப்பைப் பூக்கள்..!
- “காவடிச் சிந்து புகழ் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்”
- அதிர்ஷ்டம்
- முனைவர், புலவர் த.கோடப்பிள்ளை
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது
- கார்காலம்
- கருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! கடுகு விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள்(Compact Stars&Preon Stars) (கட்டுரை:62 பாகம்-1)
- மனப் பொழிவு
- குழாய் தின்ற தண்ணீர் துளிகள்…..
- நினைவுகளின் தடத்தில் – (34)
- நட்சத்திரவாசி
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -8
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது -1
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – 2
- அன்புள்ள ஆசிரியருக்கு
- தேசிய பல்துறை ஆய்வரங்கம்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தியாயம்
- ஏலாதி இலக்கிய விருது 2009 முனைவர் பொ.நா.கமலா மற்றும் விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு.
- இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – நிகழ்ச்சி நிரல்
- ஊழிக் காலம்
- Portnoy’s Complaint – அடையாளமழித்தற் கலை – புத்தக விமர்சனம்
- அந்த காலத்தில் நடந்த கொலை – மானிஃபெஸ்டோ – 2
- போதிமரங்கள்
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
ஹெச்.ஜி.ரசூல்
முனைவர் பொ.நா.கமலா மற்றும் விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு.

ஏலாதி இலக்கிய விருதுவிழங்கும் விழா தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் தக்கலையின் சார்பில் ஆகஸ்ட்15 சனி மாலை தேசிய பல்துறைஆய்வரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் தலைமைதாங்கினார்.பேராசிரியர் நட.சிவகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.
2007 – 2009 ஆண்டு காலகட்டத்தில் வெளிவந்த சிறந்த திறனாய்வு நூல்களுக்கான போட்டியில் முனைவர் பொ.நா.கமலா எழுதி காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியர் முதல் தெரிதா வரை திறனாய்வுநூல் தேர்வு செய்யப்பட்டது.
மற்றொரு நூலாக சென்னையைச் சேர்ந்த திரைப்பட விமர்சகர் விஸ்வாமித்திரன் எழுதிய சிறுவர் சினிமா சிறந்த உலகத் திரைப் படங்கள் திறனாய்வு நூலும் தேர்வு செய்யப்பட்டது.
ஏலாதி இலக்கியவிருது ஹசன்கதீஜா நினைவுப் பரிசுக்கான ரூ2000 / க்கான பணமுடிப்பும் ஞாபகசிற்பமும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முனைவர் பொ.நா.கமலாவிற்கு டாக்டர் பிளாட்பின் முன்னிலையில் பேரா.அய்யப்பன் மற்றும் கவிஞர் ஜி.எஸ்.தயாளன் ஆகியோர் வழங்கினர்.
முனைவர் பொ.நா.கமலா விருதுநகரைச் சேர்ந்தவர். தமிழ்துறைப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.எண்பதுக்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் ஆய்வுகள் நிகழ்த்தியுள்ள இவர் மலேஷியா,தாய்லாந்து. சிங்கப்பூர் என உலக அளவில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கட்டுரை வாசித்துள்ளார். புற்றுநோயாளிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பொதுத் தொண்டைச் செய்துவருகிறார்.
ஏலாதிவிருது பெற்ற தொல்காப்பியர்முதல் தெரிதாவரை நூலில் அறுபது ஆய்வுக்கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன்.தொல்காப்பியம்,சங்க இலக்கியம்,வள்ளுவம்,காப்பியம்,நவீனகால நாவல், புனைகதை,கவிதை படைப்பிலக்கியங்களை பின் அமைப்பியல் ஆய்வியல் முறையில் திறனாய்வு செய்துள்ளார்.
ஏலாதி விருது அவுக்காரும்மாள் நினைவுப்பரிசை பெற்ற மற்றொருநூல் திரைப்பட விமர்சகர் விஸ்வாமித்திரனின் சிறுவர்சினிமா சிறந்த உலகத் திரைப்படங்கள் இரு தொகுதிகள் வம்சி வெளியீடாக வந்துள்ளன.கியூப அரசியல் திரைப்பட இயக்குநர் தாமஸ் கிதாரெஸ் அலியா குறித்த இவரது தொகுப்பு நூல் கியூபசினிமா ஒரு கலைஞனின் புரட்சித்தடம்.குருதியில் படிந்த மானுடம் சமகால அரசியல் திரைப்படங்கள் என்ற மற்றொரு நூலும் வெளிவந்துள்ளது.இவர் இலங்கை திரைப்பட இயக்குநர் பிரசன்னா விதான கேவினோடு இணைந்து பணியாற்றிய பிளவேர்ஸ் ஆப் த ஸ்கை 2008 ல் கோவா திரைப்பட விழாவில் வெள்ளிமயில் விருதைப் பெற்றது.ஏலாதி விருதுக் குழுவினர் ஹெச்.ஜி.ரசூல்.ஜி.எஸ் தயாளன்,நட.சிவகுமார், எச்.முஜிபுர் ரகுமான் மற்றும் தக்கலை கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் குறும்பட இயக்குநர் எஸ்.ஜே.சிவசங்கர் நன்றி கூறினார்.