- நெஞ்சு பொறுக்குதில்லையே…
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! கடுகு விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள்(Compact Stars&Preon Stars) (கட்டுரை:62 பாகம்-1)
- மனப் பொழிவு
- குழாய் தின்ற தண்ணீர் துளிகள்…..
- நினைவுகளின் தடத்தில் – (34)
- நட்சத்திரவாசி
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -8
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது -1
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – 2
- அன்புள்ள ஆசிரியருக்கு
- தேசிய பல்துறை ஆய்வரங்கம்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தியாயம்
- ஏலாதி இலக்கிய விருது 2009 முனைவர் பொ.நா.கமலா மற்றும் விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு.
- இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – நிகழ்ச்சி நிரல்
- ஊழிக் காலம்
- Portnoy’s Complaint – அடையாளமழித்தற் கலை – புத்தக விமர்சனம்
- அந்த காலத்தில் நடந்த கொலை – மானிஃபெஸ்டோ – 2
- போதிமரங்கள்
- கருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்
- கார்காலம்
- www.மனிதம்.com
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -1 (மரணம் விடும் அழைப்பு)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 49 << கடற் புதிர்கள் >>
- உன்னதம் – ஆகஸ்டு 2009 இதழ்
- என். விநாயக முருகன் கவிதைகள்
- PURAVANKARA Presents “BRIEF CANDLE”
- சமஸ்க்ருதம் பற்றி அறிய முயற்சிக்கவேண்டும்
- ஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..
- முதல் முதலாய்த் தோற்ற நாள்
- வேத வனம் –விருட்சம் 47
- ஒலிகளாலான உலகு (நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)
- மழை
- குப்பைப் பூக்கள்..!
- “காவடிச் சிந்து புகழ் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்”
- அதிர்ஷ்டம்
- முனைவர், புலவர் த.கோடப்பிள்ளை
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
மதியழகன் சுப்பையா
(1)
ஈர நிலம், ஈரக் காற்று
புறச்சூழலெங்கும் ஈரமயம்
ஒருமுறை ஒரேயொருமுறை
அழைத்துப் பேசியிருக்கலாம் நீ
வரண்டு பிழந்த மனப்பரப்பில்
துளிர்த்திருக்கும் துளி நீர்
இதோ பார்
எனைக்கண்டு கெக்கலித்தபடி
நிறைந்து வழிகிறது வான்மழை
(2)
கொட்டும் மழைப் பொழுதில்
வருவதாய் சொன்ன உன் வாக்கை
உள்ளங்கையிலேந்திக் காத்திருந்தேன்
தட்டும் ஓசைக் கேட்க கதவு திறந்தால்
எட்டும் திசை நின்று
பல்லிளிக்கிறது பருவமழை
(3)
அடுப்பில் சுட்டெடுத்த
பச்சை மக்காச் சோளம்
சுக்கும் மிளகுமிட்டு காய்த்த
பால் கலக்கா சுடு தேனீர்
கீரையிட்டு பொரித்தெடுத்த
கடலைமாவுத் திண்பண்டம்
குறுந்திரையில் ரம்மியமாய்
சிலிர்பூட்டும் காதல் கதை
சாரல் தெளிக்கும் சாளரம்
பனிக்கும் பளிங்குத் தரை
கனமில்லாத கருஞ்சிகப்பு
கம்பளிக்குள் கிடந்து
வரண்ட கண்கள் சுறுக்கி
கைவளைத்து கால்கள் இறுக்கி
தனித்திருக்கும் என்னுருவம்
எட்டியெட்டிப் பார்த்தபடி
ஏளனமும் செய்தபடி
விரைந்தோடும் வீதியெங்கும்
மஞ்சொழுக பெய்யும் மழை
(4)
துணை கொண்ட நாயொன்றும்
இணை கொண்ட சிட்டொன்றும்
மழைக்கொதுங்கும் நிலை பார்த்த
பனிப் பொரிபோல் உருவ மழை
படி தாண்டா எனைப் பார்த்து
படபடவென பெய்கிறது
பரிகாசம் செய்தபடி
(5)
பார்வையெட்டும் தூரம்வரை
பாய்ந்தொழுகும் படிக மழை
உடலூற நனையும்படி
உளமெங்கும் விருப்பக் கொடி
கைப்பிடித்து கால் நனைக்க
கையொன்று கிட்டவில்லை
குடை பிடித்து போகுமென்
கூட வர யாருமில்லை
கடல் சேரும் பெரும் நீரும்
கடைத் தெருவின் கழிநீரும்
உடல் வழியும் துளிநீரும்
உவர்ப்பான விழிநீரும்
வீணாகிப் போகிறது
விரைந்து நீ வாராயோ
madhiyalagan@gmail.com