- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்-51
- கவிக்கட்டு 41
- காஷ்மீரிலிருந்து தபால் அட்டை (மூலம் : ஆகா ஷாஹித் அலி)
- புலம்பல்
- குழந்தைகளின் உயிரோடு விளையாடும் பாலிவினைல்
- பிரான்சில் பட்டாம்பூச்சி போல் உயர்ந்த உலகத்தின் பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம் [World ‘s Highest Butterfly Bridge in France :
- வாரபலன் டிசம்பர் 23,2004 – தளர்வில்லா கண்ணப் பெருவண்ணான் , நீலக்குயிலுக்கு ஐம்பது, கிரீஷ் கார்னாடுக்கு ஆக்ஸ்ஃபோர்ட் குளறுபடி , ச
- குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் குருமூர்த்தி!
- இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 1
- உழவர்களை நாடு கடத்தும் அரசு
- அணுவாற்றல் அறிவுதான் விஞ்ஞான அறிவா ?
- இசை விழா 2004 – I
- புத்தாண்டு-பொங்கல் வாழ்த்துக்கள்
- கீதாஞ்சலி (9) – மாலையில் சேராத மலர் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- பெரியபுராணம் – 23
- அறிவியல் சிறுகதை வரிசை 6 – உற்றுநோக்கும் பறவை
- போராட்டம்
- போதி மரம்
- மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)
- நீண்ட உறக்கம்
- வயதுகளோடு….
- யாரிடமாவது….
- நிராகரிப்பின் வலி
- காமதகனம்
- தெருவிளக்குகள்
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 8 – ஓர் இரவு
- விளக்கு பரிசு பெற்ற பேராசிரியர் சே ராமானுஜம் அவர்களுக்கு பரிசும் பாராட்டுவிழாவும்
மதியழகன் சுப்பையா

வயதுகளோடு
மறைந்து விடுகிறது எல்லாம்
படுக்கையில்
மூத்திரம் கழிந்தது
உமாவோடு
ஒட்டிப் படுத்தது
ஐந்து வயதில்
அப்பா இறந்து போனது
முதல் முகச் சவரத்தில்
முகம் பற்றி எரிந்தது
அக்காவை
அவனுடன் பார்த்து
ஆத்திரப் பட்டது
ஒரு தலையாய்
காதலித்தது
கதவிடுக்கு வழியாய்
குளிப்பதைப் பார்த்தது
முதலிரவில்
முரட்டுத்தனமாய்
இயங்கியது
மகனின் முகத்தை
உற்றுப் பார்த்து
உறுதிப் படுத்துக் கொண்டது
அவளின் சாவு
மருமகளின்
பிச்சையாய் உணவு
பேரனின்
கிண்டல்
வயதுகளோடு
மறைந்து விடுகிறது
எல்லாம்
மதியழகன் சுப்பையா
மும்பை
madhiyalagan@rediffmail.com