- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்-51
- கவிக்கட்டு 41
- காஷ்மீரிலிருந்து தபால் அட்டை (மூலம் : ஆகா ஷாஹித் அலி)
- புலம்பல்
- குழந்தைகளின் உயிரோடு விளையாடும் பாலிவினைல்
- பிரான்சில் பட்டாம்பூச்சி போல் உயர்ந்த உலகத்தின் பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம் [World ‘s Highest Butterfly Bridge in France :
- வாரபலன் டிசம்பர் 23,2004 – தளர்வில்லா கண்ணப் பெருவண்ணான் , நீலக்குயிலுக்கு ஐம்பது, கிரீஷ் கார்னாடுக்கு ஆக்ஸ்ஃபோர்ட் குளறுபடி , ச
- குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் குருமூர்த்தி!
- இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 1
- உழவர்களை நாடு கடத்தும் அரசு
- அணுவாற்றல் அறிவுதான் விஞ்ஞான அறிவா ?
- இசை விழா 2004 – I
- புத்தாண்டு-பொங்கல் வாழ்த்துக்கள்
- கீதாஞ்சலி (9) – மாலையில் சேராத மலர் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- பெரியபுராணம் – 23
- அறிவியல் சிறுகதை வரிசை 6 – உற்றுநோக்கும் பறவை
- போராட்டம்
- போதி மரம்
- மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)
- நீண்ட உறக்கம்
- வயதுகளோடு….
- யாரிடமாவது….
- நிராகரிப்பின் வலி
- காமதகனம்
- தெருவிளக்குகள்
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 8 – ஓர் இரவு
- விளக்கு பரிசு பெற்ற பேராசிரியர் சே ராமானுஜம் அவர்களுக்கு பரிசும் பாராட்டுவிழாவும்
சத்தி சக்திதாசன்

பாவங்களை வாங்கிக்கொள்
மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததாலோ
மனிதனின் சோகம் நீ அறிந்தனை
மக்களின் பாவங்களை தன்னில் தாங்கி
மனிதத்துவத்தின் முடியாய் திகழ்ந்தனையே
மாபெரும் தேவதூதனே இயேசுவே !
நத்தார் புனித தினத்தில்
நயமாய் ஓர் இந்து
நான் உன்னை நினைந்து
நெஞ்சத்தில் நிறுத்துகிறேன் !
மனிதனின் விடுதலைக்காய் நீ
மரணித்த உதாரணத்தால்
மண்ணின் விடுதலைக்காய்
மடிகின்றார் புவியினிலே
மறவர்கள் ஆயிரம்
மக்களின் நாயகனே இயேசுவே !
தன்னைப்போல் பிறனையும் நேசி
தன்னிகரற்ற தத்துவத்தை
தரணிக்களித்த கர்த்தரே
தனித்துவமான புனிதன் நீ !
தியாகத்திற்கெல்லாம் முடியாக
தீயது செய்தோரின் பாவமெல்லாம்
தோள்களில் தாங்கிய உயர்ந்தோனே
தோற்காத வீரம் நிறைந்தவன் நீ !
மதங்களில் என்றும் பிரிவில்லை
மக்கள் அனைவரும் சகோதரரே
கிறிஸ்துவின் பிறந்த தினமதில்
கேட்குது ஓர் இனிய கீதம்
மார்கழித் திங்களின் சிறப்பாம்
மாறாத இயேசு கீதம்
****
புயற் பூ
புதுமைப் பெண்ணே விழித்துக் கொள்வாய் இது உன் காலம்
புரட்சிக் கனலாய் பொங்கி எழுவாய் இன்றைய நவீன உலகில்
பூவென்றும் பொன்னென்றும் கவிபாடி துங்க வைத்த காலமல்ல
பூமகள் நீ புதுமகளாய் உலகமைக்க புறப்பட்ட பொற்காலமிது
அடக்கியுனை வீட்டினுள்ளே சிறைவைத்த கதையெல்லாம் மாறியது
அறிவெனும் ஆயுதம் ஏந்தி ஆற்றுகிறாய் கடமை ஆயிரம் மறவாதே
சமுதாய வெற்றிக்கு நீ கொடுத்த உழைப்பு தெளிவாக தெரியுமிங்கு
சமபங்கு தந்தாலும் உணராத கும்பலுக்கு புகட்டிடுவாய் பாடமொன்று
தாயாய் மனைவியாய் காதலியாய் களிப்பூட்டும் நீ போடும் பாத்திரங்கள்
தாமறியார் முட்டாள்கள் உழைப்பை மட்டும் சுரண்டிடுவார் மூடர்கள்
புறப்படுவாய் தோழியே ; மென்மையான இதயமென்று மிதிக்கும் சிலர்
புயலுக்குள் பூத்த ஒரு புயற் பூ என புல்லர் புரிந்துடும் வகை செய்வாய்
****
sathnel.sakthithasan@bt.com