- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்-51
- கவிக்கட்டு 41
- காஷ்மீரிலிருந்து தபால் அட்டை (மூலம் : ஆகா ஷாஹித் அலி)
- புலம்பல்
- குழந்தைகளின் உயிரோடு விளையாடும் பாலிவினைல்
- பிரான்சில் பட்டாம்பூச்சி போல் உயர்ந்த உலகத்தின் பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம் [World ‘s Highest Butterfly Bridge in France :
- வாரபலன் டிசம்பர் 23,2004 – தளர்வில்லா கண்ணப் பெருவண்ணான் , நீலக்குயிலுக்கு ஐம்பது, கிரீஷ் கார்னாடுக்கு ஆக்ஸ்ஃபோர்ட் குளறுபடி , ச
- குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் குருமூர்த்தி!
- இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 1
- உழவர்களை நாடு கடத்தும் அரசு
- அணுவாற்றல் அறிவுதான் விஞ்ஞான அறிவா ?
- இசை விழா 2004 – I
- புத்தாண்டு-பொங்கல் வாழ்த்துக்கள்
- கீதாஞ்சலி (9) – மாலையில் சேராத மலர் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- பெரியபுராணம் – 23
- அறிவியல் சிறுகதை வரிசை 6 – உற்றுநோக்கும் பறவை
- போராட்டம்
- போதி மரம்
- மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)
- நீண்ட உறக்கம்
- வயதுகளோடு….
- யாரிடமாவது….
- நிராகரிப்பின் வலி
- காமதகனம்
- தெருவிளக்குகள்
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 8 – ஓர் இரவு
- விளக்கு பரிசு பெற்ற பேராசிரியர் சே ராமானுஜம் அவர்களுக்கு பரிசும் பாராட்டுவிழாவும்
அன்பாதவன்

தவிக்கிறாய் உன்னுள்- எனினும்
தவிர்க்கிறாய் என்னை
உரையாடல்களில் உடைபடுமென்று
மவுனங்களை பொத்தி காக்கிறாய்
ரகசியங்களின் இருட்குகையில்
இருப்பதறியாது தவிக்கிறேன், இருட்டில்
வெய்யிலில் வீடு நுழைந்தவன் போல
அடித்து சாத்தியக் கதவின்
விளிம்பில் சிக்கிய விரலாய்
துடிக்கிற என் மனம் படிப்பின்
வரக்கூடும் வெளிச்சம்
என் மேல் உன் நிழலும் படாதபடிக்கு
தடுக்கின்ற சக்திகளை
எதிர்கொள்ளும் திராணியற்றவனின்
முனகல் கேட்கிறதா
கேட்டிருப்பின் உணரக்கூடும்
நிராகரிப்பின் வலியை.
அன்பாதவன்
jpashivammumbai@rediffmail.com