- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்-51
- கவிக்கட்டு 41
- காஷ்மீரிலிருந்து தபால் அட்டை (மூலம் : ஆகா ஷாஹித் அலி)
- புலம்பல்
- குழந்தைகளின் உயிரோடு விளையாடும் பாலிவினைல்
- பிரான்சில் பட்டாம்பூச்சி போல் உயர்ந்த உலகத்தின் பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம் [World ‘s Highest Butterfly Bridge in France :
- வாரபலன் டிசம்பர் 23,2004 – தளர்வில்லா கண்ணப் பெருவண்ணான் , நீலக்குயிலுக்கு ஐம்பது, கிரீஷ் கார்னாடுக்கு ஆக்ஸ்ஃபோர்ட் குளறுபடி , ச
- குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் குருமூர்த்தி!
- இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 1
- உழவர்களை நாடு கடத்தும் அரசு
- அணுவாற்றல் அறிவுதான் விஞ்ஞான அறிவா ?
- இசை விழா 2004 – I
- புத்தாண்டு-பொங்கல் வாழ்த்துக்கள்
- கீதாஞ்சலி (9) – மாலையில் சேராத மலர் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- பெரியபுராணம் – 23
- அறிவியல் சிறுகதை வரிசை 6 – உற்றுநோக்கும் பறவை
- போராட்டம்
- போதி மரம்
- மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)
- நீண்ட உறக்கம்
- வயதுகளோடு….
- யாரிடமாவது….
- நிராகரிப்பின் வலி
- காமதகனம்
- தெருவிளக்குகள்
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 8 – ஓர் இரவு
- விளக்கு பரிசு பெற்ற பேராசிரியர் சே ராமானுஜம் அவர்களுக்கு பரிசும் பாராட்டுவிழாவும்
ஸ்ரீமங்கை

—-
முன்பெல்லாம் குழல்விளக்கு
இத்தெருவில்.
இறந்த பூச்சிகள் கரியாக
அடைத்துக்கிடக்க
பாதிக் குழல் காட்டியபடி
மழை முடிந்ததென
யாரும் கேட்காமலே
மங்கிய ஒளியில் மெளனமாய்
அறிவித்துக்கிடக்கும்.
மின்சாரம் பாய்ந்தும்
மூன்று மணிநேரமாய்
மினுமினுக்கி, இறுதியில்
யாரும் அறியா நடுநிசியில்
கசிந்த இருளில் ஒளிகரைத்து
இறந்துபோகும்.
உண்ணியரித்த
முதுகு தேய்த்து,
முகர்ந்த நாய்கள்
கால்தூக்கி உபாதைஇறக்கிப்
போன நசுங்கிய கம்பங்கள்
இறந்த விளக்கின் சுமையோடு
கழுத்து வளைந்து மெளனமாய்
தலைகுனிந்து நிற்கும் ..
எதிர்வீட்டுக் கிழவர் போலே.
இப்போதெல்லாம்
இங்கே,
சோடியம் வேப்பர் விளக்குகள்
ஒரே அலைநீள மஞ்சள் ஒளிபரப்பி
வெறியேறி ஒளிவெள்ளம் பாய்ச்சுகிறது
கண்கள் கூசிமளவிற்கு..
விறைத்த கம்பங்களோவெனில்
மதர்ப்பாய் நிமிர்கின்றன-
ஓய்யாரமாய் விளக்குகளை
கோணங்களில் தாங்கியவாறு.
அன்புடன்
ஸ்ரீமங்கை
kasturisudhakar@yahoo.com