- புக்ககம் போன புத்தகம்
- ரகசிய அறை
- தீபமடியோ தீபம் !
- உதவும் உள்ளத்தின் குமுறல்
- ஆட்டத்தின் எல்லைகள்
- வெண்ணிலவே சொல்லிடுவாய்!
- அலைக்கழிப்பு
- சில்மிஷங்கள்
- முடிவுகளல்ல ஆரம்பங்கள்
- பா.ஸ்ரீராம் – நான்கு கவிதைகள்
- தமிழைப் பாடு நீ!
- விழி தூர கவனம்
- பணமே பரமாத்மாவே !
- எக்ஸ்-ரே பரிசோதனைகள் இருட்பொருள் (Dark Matter) பெரும்பாலும் குளிர்ந்து இருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.
- பழங்காலத்திய உயிர் ஒன்று செல் பரிணாம அறிவை கேள்விக்குள்ளாக்குகிறது
- ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து (Accident at Japan ‘s Tokaimura Nuclear Fuel Factory)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினொன்று
- அல்லி-மல்லி அலசல் (பாகம் 1)
- விடியும்! (நாவல் – 1)
- இன்பராஜின் இதயம்
- நுடம்
- வாரபலன் (ஜூன் 14, 2003 – சேட்டன் , புலிநகக்கொன்றை)
- மந்திரவாதி
- நாம் நாமாக…
- பாகிஸ்தானிய ராணுவத்துடன் சமாதானப் பேச்சு என்ற கேலிக்கூத்து
- இந்திய ராணுவத்தை ஈராக்குக்கு அனுப்புவது தவறு
- ஆன்மீக உலகின் கலங்கரை விளக்கு (விவேகானந்தர்)
- மதுரைக்கோயில் அரிசன ஆலயப் பிரவேசம், 1939
- அருமையான பாதாளம்
- கடிதங்கள்
- குறிப்புகள் சில-19 ஜீன் 2003 (அக்னி சிறகுகள்-சேவைத்துறை குறித்த பொது வணிக ஒப்பந்தம்-திரைப்படப் பிரதியும்,அதற்கு அப்பாலும்-மனிதம்
- படைப்பின் வன்முறை – எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களின் கூட்டறிக்கை
- பழைய முடிவும் புதிய முடிவும் (ஆர்.சூடாமணியின் ‘ரயில் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 65 )
- தமிழ்ப் படைப்புலகம்
- சுஜாதா என்றொரு கதை சொல்லி
புகாரி, கனடா

பணமே
பரமாத்மாவே
உன்னைப் படைத்த
எங்களையே
நீ படைக்கிறாயடா
பூங்கொடி
என்று உன் கைகளில்
இரும்புச் சங்கிலியைக்
கொடுத்து விட்டோம்
அவை
எங்களுக்கே
விலங்குகளாகிவிட்டன
உன்னில்
தஞ்சமடைந்த
அடிமை நாய்கள்
குரைக்காத
நிமிடங்களே இல்லை
O
நீ அறிவாயா ?
உன் அதர்மங்களால்
எங்கள்
உடலும் உள்ளமும்
பிய்ந்துபோய்
இரத்த வடுக்களைச்
சுமக்கின்றன
உன் கொடுங்கோலில்
கற்பரசிகள்
விற்பனைக்கு நிற்கின்றனர்
எங்கள் குரல்கள்
நேர்மை நாண்களை
இழந்து
நாட்கள் நகர்ந்துவிட்டன
தன்மானத்தை உன்னிடம்
நிரந்தரமாய் அடகுவைத்துவிட்டு
வயிறு நனைக்கும் கூட்டங்கள்
பெருகிவிட்டன
அன்பும் பாசமும்
மூச்சுவிடமாட்டாமல்
புதைக்கப்பட்டு விட்டன
உறவுகள்
உன்னையே பாலமாக்கிக்கொண்டு
பவனி வருகின்றன
O
எங்களின்
ஆசை அடிக்கற்களில்
உன்
வானம் தொடும் கோபுரங்களை
எங்கள் முதுகிலேயே எழுப்பிவிட்ட
பணமே
பரமாத்மாவே
உன்னைப் படைத்த எங்களையே
நீ படைக்கிறாயடா.
*
buhari2000@rogers.com