- புக்ககம் போன புத்தகம்
- ரகசிய அறை
- தீபமடியோ தீபம் !
- உதவும் உள்ளத்தின் குமுறல்
- ஆட்டத்தின் எல்லைகள்
- வெண்ணிலவே சொல்லிடுவாய்!
- அலைக்கழிப்பு
- சில்மிஷங்கள்
- முடிவுகளல்ல ஆரம்பங்கள்
- பா.ஸ்ரீராம் – நான்கு கவிதைகள்
- தமிழைப் பாடு நீ!
- விழி தூர கவனம்
- பணமே பரமாத்மாவே !
- எக்ஸ்-ரே பரிசோதனைகள் இருட்பொருள் (Dark Matter) பெரும்பாலும் குளிர்ந்து இருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.
- பழங்காலத்திய உயிர் ஒன்று செல் பரிணாம அறிவை கேள்விக்குள்ளாக்குகிறது
- ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து (Accident at Japan ‘s Tokaimura Nuclear Fuel Factory)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினொன்று
- அல்லி-மல்லி அலசல் (பாகம் 1)
- விடியும்! (நாவல் – 1)
- இன்பராஜின் இதயம்
- நுடம்
- வாரபலன் (ஜூன் 14, 2003 – சேட்டன் , புலிநகக்கொன்றை)
- மந்திரவாதி
- நாம் நாமாக…
- பாகிஸ்தானிய ராணுவத்துடன் சமாதானப் பேச்சு என்ற கேலிக்கூத்து
- இந்திய ராணுவத்தை ஈராக்குக்கு அனுப்புவது தவறு
- ஆன்மீக உலகின் கலங்கரை விளக்கு (விவேகானந்தர்)
- மதுரைக்கோயில் அரிசன ஆலயப் பிரவேசம், 1939
- அருமையான பாதாளம்
- கடிதங்கள்
- குறிப்புகள் சில-19 ஜீன் 2003 (அக்னி சிறகுகள்-சேவைத்துறை குறித்த பொது வணிக ஒப்பந்தம்-திரைப்படப் பிரதியும்,அதற்கு அப்பாலும்-மனிதம்
- படைப்பின் வன்முறை – எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களின் கூட்டறிக்கை
- பழைய முடிவும் புதிய முடிவும் (ஆர்.சூடாமணியின் ‘ரயில் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 65 )
- தமிழ்ப் படைப்புலகம்
- சுஜாதா என்றொரு கதை சொல்லி
பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.

என் வாழ்க்கை
நிலவோடு ஒப்பிட்டேன்
நீதானே உயர்ந்தவள்…
மலரோடு ஒப்பிட்டேன்
நீதானே சிறந்தவள்…
கனவோடு கலக்கின்ற
கண்ணான கண்மணி
மனதோடு சேர்ந்திடு
மறவாது மின்மினி
சொலவது காதலன்
சொல்வது என் கடன்…
என்
காதோடு பாடியவள் நீதானே
தினம் காற்றோடு பேசியவள் நீதானே…
நெஞ்சிலே நிறைந்தவளும் நீதானே…- என்
நினைவிலே கலந்தவளும் நீதானே…
உள்ளத்தில் ஓர் இடம்
உனக்கு நான் கொடுத்தேன் – என்
மெளனத்தின் கொடுமையிலே
பொறுமை நான் இழந்தேன்
சிரித்து கொண்டு சொல்லிவிடு
ஓர் வார்த்தை…
அதிலே தான் இருக்கிறது
என் வாழ்க்கை…
பதில்
கல்லூரி எனக்கு
புனிதமான இடமாய் தெரிந்தது
என் அறிவு வளர்ந்ததிற்காக அல்ல
நீ அறிமுகமானாயே அதற்காக…
இனிப்பும் எனக்கு
கசப்பாக இருந்தது
உன் தந்தைக்கு
சக்கரை வியாதியாம்…
தலைமுடி அதிகம் இருப்பது
எனக்கு பிடிக்காது
ஏனென்றால்
உன் தங்கைக்கு பிடிக்காதாம்…
விபூதி பூசிக் கொண்டுதான்
வெளியே வருவேன் – உன்
அன்னைக்கு ஆன்மீகபக்தி அதிகமாம்…
எல்லோரிடமும்
நல்ல பெயர்…
உன்னிடம் மட்டும்
இல்லை பதில்….
தடுமாற்றம்
பெண்ணே!
உன்னை பேனா
முனையிலே வர்ணிக்க
முயன்றேன்…
தானாக கைகள்
தடுமாற்றம் தந்தது…
காரணம்
பூவை விடவும் மென்மையான
உனது உடலில்
பேனா முனைப்பட்டு
புண்ணாகிவிடக் கூடாது
என்பதற்காக…
விமோச்சனம்
வானவில் வழித் தவறி
பூமியிலே தோன்றியதோ ?
வண்ணத்துப்பூச்சி ஓன்று
பெண்ணாக மாறியதோ ?
புள்ளிமானா அவள்
துள்ளி குதிக்கின்றாள் – என்
நெஞ்சில் அன்பையவள்
அள்ளி விதைக்கின்றாள்
விதைத்தவிதை முட்டி வந்து
காதலாக மாறியதே…
காதலாக மாறியதும்
கடல் கடுகாக தோன்றியதே…
அவள்
ஒரு வார்த்தை சொன்னதுமே
உள்ளத்தில் உற்சாகம்…
அவள் என்னை தொட்டு சென்றால்
உடனே விமோச்சனம்…
***
balageethan@rediffmail.com