- புக்ககம் போன புத்தகம்
- ரகசிய அறை
- தீபமடியோ தீபம் !
- உதவும் உள்ளத்தின் குமுறல்
- ஆட்டத்தின் எல்லைகள்
- வெண்ணிலவே சொல்லிடுவாய்!
- அலைக்கழிப்பு
- சில்மிஷங்கள்
- முடிவுகளல்ல ஆரம்பங்கள்
- பா.ஸ்ரீராம் – நான்கு கவிதைகள்
- தமிழைப் பாடு நீ!
- விழி தூர கவனம்
- பணமே பரமாத்மாவே !
- எக்ஸ்-ரே பரிசோதனைகள் இருட்பொருள் (Dark Matter) பெரும்பாலும் குளிர்ந்து இருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.
- பழங்காலத்திய உயிர் ஒன்று செல் பரிணாம அறிவை கேள்விக்குள்ளாக்குகிறது
- ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து (Accident at Japan ‘s Tokaimura Nuclear Fuel Factory)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினொன்று
- அல்லி-மல்லி அலசல் (பாகம் 1)
- விடியும்! (நாவல் – 1)
- இன்பராஜின் இதயம்
- நுடம்
- வாரபலன் (ஜூன் 14, 2003 – சேட்டன் , புலிநகக்கொன்றை)
- மந்திரவாதி
- நாம் நாமாக…
- பாகிஸ்தானிய ராணுவத்துடன் சமாதானப் பேச்சு என்ற கேலிக்கூத்து
- இந்திய ராணுவத்தை ஈராக்குக்கு அனுப்புவது தவறு
- ஆன்மீக உலகின் கலங்கரை விளக்கு (விவேகானந்தர்)
- மதுரைக்கோயில் அரிசன ஆலயப் பிரவேசம், 1939
- அருமையான பாதாளம்
- கடிதங்கள்
- குறிப்புகள் சில-19 ஜீன் 2003 (அக்னி சிறகுகள்-சேவைத்துறை குறித்த பொது வணிக ஒப்பந்தம்-திரைப்படப் பிரதியும்,அதற்கு அப்பாலும்-மனிதம்
- படைப்பின் வன்முறை – எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களின் கூட்டறிக்கை
- பழைய முடிவும் புதிய முடிவும் (ஆர்.சூடாமணியின் ‘ரயில் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 65 )
- தமிழ்ப் படைப்புலகம்
- சுஜாதா என்றொரு கதை சொல்லி
தமிழ்மணவாளன்

விரிந்து கிடக்கும் பிரமாண்டத்தின் முன்
குவிந்து கிடக்கும் ஜனத்திரள்
வியப்பை விழுங்கியபடி
வாழ்வின் மொத்த சந்தோஷத்தையும்
வாரியெடுத்துச் சேர்க்கின்றன
பாதங்களில்
தொடர்ந்த பேரலைகள் நுரைத்துப் பொங்கி
.
அலைகள் மோதவும்
அநேகமாய் பின்னகர்ந்த
அத்தனை சந்தோஷத்தையும்
அப்படியே ஏற்பதில் அச்சமுற்றபடி.
நுரையீரல் கனம் குறைந்த
காற்றை ஊடுருவவும்
பொன்னிற ஒளியிழைகள்
அனைத்துக்கும் தயார்படுத்தும்
மனசையும்
மணல் வெளியையும்.
புரவியேறித் திரும்பும் பிள்ளைகள்
இறங்குகிறார்கள்
அண்டை நாட்டை வென்று திரும்பிய
அந்தக்கால இளவரசனாய்.
வளைய வளைய வரும்
சிறுவனின் வயிறெண்ணி
வாங்கத்தான் வேண்டும்
சுண்டலும், முறுக்கும்.
சாயங்காலம் கடற்கரையின்
சராசரி காட்சிகள் தாம்
யாருக்கும் வாய்க்குமிது
.
பரந்து கிடக்கும் கடற்பரப்பின்
வரிக்குதிரையொன்று
பறக்கவுமியலாது, மூழ்கியும் விடாது
பயணிக்கும் கண்தூரம்.
கடற்கரை செல்லும் போதெல்லாம்
இந்தக் காட்சியைக் காணாமல்
வீடு திரும்பியதில்லை
ஒரு போதும்.
tamilmanavalan@yahoo.co.in