- உலகிலே பிரமிக்கத் தக்க மிகப் பெரும் ஜப்பானின் ஊஞ்சல் பாலம் (1998) [Japan ‘s Akashi Kaikyo Suspension Bridge]
- ஞான குரு – கதை — 03
- அவன் அப்பிடித்தான்..
- அஃது
- மாய மான்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 14
- பிறழ்வுகள்
- புழுத் துளைகள்(குறுநாவல்) – 3
- ஒரு மழை இரவில்… (O ‘Henryயின் ‘After Twenty Years ‘ கதையின் தமிழாக்கம்)
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 19
- மறுபடியும் ஓர் இனத் தூய்மைப்படுத்தல்
- மைக்ரோ சாஃப்ட் நுழைந்த நாடு
- கற்பு என்கின்ற காட்டுமிராண்டித்தனம்
- கட்சிகள் குறையும் நிச்சயமாய்! (இந்திய அரசியல் கட்சிகள் பற்றியது)
- வாரபலன் ஏப்ரல் 8, 2004 (சின்னு கிருஷ்ணா மற்றும் இதர கர்நாடக சங்கீதங்கள், கிராமக்கதைகள், மலையாள மாந்திரீகம்)
- புது வருடக் கொண்டாட்டங்களும் அவற்றின் முக்கியத்துவமும்
- Chennai – Revisited
- அகிலன் லெட்சுமணன் கவிதைகள்
- பச்சை தீபங்கள்
- கண்கொத்திச் சாமி.
- கடவுள்கள் விற்பனைக்கு
- எழிற்கொள்ளை..
- தெருவும் பாடசாலையாக
- சத்தியின் கவிக்கட்டு 2
- கட்சி
- அந்த வீடு
- பரிட்சயம்
- மேலான படைப்பு
- முடிவிலடங்கும் தொடக்கம்
- தெய்வ தசகம்
- உயிர் தொலைத்தல்
- நற்பேறு பெற்றவன் நான்..
- மன்னித்து விடலாம்….
- யார் நிரந்தரம் ?
- ஏழாவது சுவைக்கவிதைகள்
- மழைகழுவிய இலையில்
- கர்ப்பனை உலா
- முதிர்கன்னி.
- ஆதியும் அந்தமும் ஆன ஆனைமுகனே போற்றி
- கி. சீராளன் கவிதைகள்
- From Drunken Monkey to Lord Ganesha! ‘புடிச்ச குரங்கை புள்ளயாரா முடிக்க ‘
- கவிதை உருவான கதை -1
- சுயசரிதைக் கட்டுரை –1 அறியப்படாத பக்கங்கள் அந்தத் தொழிலதிபர்க்குள் ஒரு கலைஞன்.
கி. சீராளன்

நாளை
பெருத்த கல்லொன்று
மோதுமென்றார்கள்
பூமியில் பலதேசம் நாசம் என்றார்
வந்தது பிரளயம்
எனப்பயந்தார்.
கோயிலெல்லாம்
ஆறுகால பூஜை
காத்துக்கிடந்தார்
உயிரை கையில் பிடித்த
மனிதர்.
பூஜை முடிந்தால்
வேலையை பார்க்கலாம்,
தாமதமானதில் சலித்துக்கொண்டார்
பக்த கோடி.
கரண்ட்டுக்கு பணம் கட்டுவதில்
தொடங்கி
டெலிபோன் பில்,
குடும்ப அட்டையில்
கெளரவ முத்திரை,
வாக்காளர் பட்டியல் திருத்தம்.
பிள்ளைக்கு
பள்ளியில் பணம் கட்ட
அல்லது
திட்டு வாங்க
வண்டிக்கு
முடிந்துபோன இன்ஷூரன்ஸ் மீட்க
படுத்திருக்கும் அப்பனுக்கு
மருந்து வாங்க
பாரியாளுக்கு வாங்கிய சேலை மாற்ற
ஆயிரம் வேலையிருக்கு செய்ய,
இந்த பூஜை முடிந்தால் தேவலை.
நாளை….
மறந்து போனார்கள்
ஐந்து வேளை சினிமா பார்த்து
அயர்ந்து போயினர்
குழாய்களின் கேபிள்களால்
நரம்புகள் கட்டுண்டு
மனிதர்
போராடும் குணம்
மறந்து போயினர்
சுற்றிலும் பெட்ரோல் பெய்கையில்
முரண்டுபண்ணவும் தோணவில்லை
பஸ்ஸின் கூரையை பிய்த்துக்கொண்டு
ஒரு ஹீரோ வரவே காத்திருந்தார்
அவன் அருளாசிக் கனவில்.
தீண்டியபின்தான் தெரிந்தது
தீ.
யாரும் வரவேயில்லை
மொத்தமாய் மாண்டுபோயினர்.
punnagaithozhan@yahoo.com
