- உலகிலே பிரமிக்கத் தக்க மிகப் பெரும் ஜப்பானின் ஊஞ்சல் பாலம் (1998) [Japan ‘s Akashi Kaikyo Suspension Bridge]
- ஞான குரு – கதை — 03
- அவன் அப்பிடித்தான்..
- அஃது
- மாய மான்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 14
- பிறழ்வுகள்
- புழுத் துளைகள்(குறுநாவல்) – 3
- ஒரு மழை இரவில்… (O ‘Henryயின் ‘After Twenty Years ‘ கதையின் தமிழாக்கம்)
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 19
- மறுபடியும் ஓர் இனத் தூய்மைப்படுத்தல்
- மைக்ரோ சாஃப்ட் நுழைந்த நாடு
- கற்பு என்கின்ற காட்டுமிராண்டித்தனம்
- கட்சிகள் குறையும் நிச்சயமாய்! (இந்திய அரசியல் கட்சிகள் பற்றியது)
- வாரபலன் ஏப்ரல் 8, 2004 (சின்னு கிருஷ்ணா மற்றும் இதர கர்நாடக சங்கீதங்கள், கிராமக்கதைகள், மலையாள மாந்திரீகம்)
- புது வருடக் கொண்டாட்டங்களும் அவற்றின் முக்கியத்துவமும்
- Chennai – Revisited
- அகிலன் லெட்சுமணன் கவிதைகள்
- பச்சை தீபங்கள்
- கண்கொத்திச் சாமி.
- கடவுள்கள் விற்பனைக்கு
- எழிற்கொள்ளை..
- தெருவும் பாடசாலையாக
- சத்தியின் கவிக்கட்டு 2
- கட்சி
- அந்த வீடு
- பரிட்சயம்
- மேலான படைப்பு
- முடிவிலடங்கும் தொடக்கம்
- தெய்வ தசகம்
- உயிர் தொலைத்தல்
- நற்பேறு பெற்றவன் நான்..
- மன்னித்து விடலாம்….
- யார் நிரந்தரம் ?
- ஏழாவது சுவைக்கவிதைகள்
- மழைகழுவிய இலையில்
- கர்ப்பனை உலா
- முதிர்கன்னி.
- ஆதியும் அந்தமும் ஆன ஆனைமுகனே போற்றி
- கி. சீராளன் கவிதைகள்
- From Drunken Monkey to Lord Ganesha! ‘புடிச்ச குரங்கை புள்ளயாரா முடிக்க ‘
- கவிதை உருவான கதை -1
- சுயசரிதைக் கட்டுரை –1 அறியப்படாத பக்கங்கள் அந்தத் தொழிலதிபர்க்குள் ஒரு கலைஞன்.
செங்காளி

கனவின்றி தூங்கிக் காலையில் எழுந்தேன்
எனக்கிலை நோயேதும் என்பதை உணர்ந்தேன்
நோயினால் வருந்துவோர் நாட்டிலே நிறைய
இருக்கின்றார் என்பதென் இதயத்தைத் தாக்கிட
நற்பேறு பெற்றவன் நானென்று உணர்ந்தேன்
தினசரித் தாள்தனை திறந்து பார்த்தேன்
நடப்புச் செய்திகளைப் படித்து முடித்தேன்
படிக்கவே தெரியாப் பாமரர் பலபேர்
இருக்கின்றார் என்பதென் இதயத்தைத் தாக்கிட
நற்பேறு பெற்றவன் நானென்று உணர்ந்தேன்
குளித்து முடித்துப்பின் மடிப்புகள் கலையா
ஆடைகள் அணிந்து அழகு பார்த்தேன்
மாற்றுடை இல்லா மக்கள் மிகையாய்
இருக்கின்றார் என்பதென் இதயத்தைத் தாக்கிட
நற்பேறு பெற்றவன் நானென்று உணர்ந்தேன்
சுவையான உணவு சூடாக இருக்க
வேண்டும் அளவு விரும்பி உண்டேன்
பசியால் வாடுவோர் பட்டினி கிடப்போர்
இருக்கின்றார் என்பதென் இதயத்தைத் தாக்கிட
நற்பேறு பெற்றவன் நானென்று உணர்ந்தேன்
வடிவான மனைவி வழியனுப்பி வைக்க
விரைவாக ஊர்தியில் வேலைக்குச் சென்றேன்
வேலைகள் இன்றி வாடிடும் மக்கள்
இருக்கின்றார் என்பதென் இதயத்தைத் தாக்கிட
நற்பேறு பெற்றவன் நானென்று உணர்ந்தேன்
வேலை முடிந்து வீடு திரும்பினேன்
மனைவியும் மக்களும் மகிழ்வுடன் நோக்க
அனாதை என்போர் ஆயிரக் கணக்கில்
இருக்கின்றார் என்பதென் இதயத்தைத் தாக்கிட
நற்பேறு பெற்றவன் நானென்று உணர்ந்தேன்
பஞ்சு மெத்தைப் படுக்கையில் சாய்ந்தேன்
கண்களை மூடுமுன் கூரையைப் பார்த்தேன்
வானமே கூரையாய் வாழும் ஏழைகள்
இருக்கின்றார் என்பதென் இதயத்தைத் தாக்கிட
நற்பேறு பெற்றவன் நானென்று உணர்ந்தேன்
நற்பேறு பெற்றநான் நல்லதும் செய்கிறேன்
அகிலத்துக் கேற்றதோர் ஆடையைப் போர்த்திட
பாரிலே பொங்கிடும் பசியினைப் போக்கிட
குவலயத் துக்கொரு கூரையை வேய்ந்திட
என்னால் முடிந்ததை எடுத்துச் செய்கிறேன்
வசதிகள் குறைவாய் வாழ்க்கையில் இருப்பினும்
சிரிப்புடன் வாழும் சிலரைப் பார்க்கிறேன்
அவர்களின் மனத்திறன் அறிந்து வியக்கிறேன்
எல்லா மிருந்தும் ஏங்குவோர் பலரை
எதிலே சேர்ப்பது என்பதை அறிகிலேன்..
**
natesasabapathy@yahoo.com