- இன்று புதிதாய்ப் பிறந்த நாவல்: இரா. முருகனின் “மூன்று விரல்” -விமர்சனம்:
- கோமதி கிருஷ்ணன் கவிதைகள்
- ஆதிமுதல்….
- நழுவும் …
- மெளனம்
- எனக்குள் எரியும் நெருப்பு.
- காவிரி மண் வாக்காளர்களே….!
- நல்லாமல் நன்றியெது ?
- சோற்றுப் புத்தகம்
- சத்தி சக்திதாசனின் கவிக்கட்டு 1
- வேடதாரிகள்
- கே.கோவிந்தன் கவிதைகள்
- பால் கடன்
- சொல்லால் செத்த புறாக்கள்
- அன்புடன் இதயம் – 13 – நிலம்
- இப்போது உனக்காக…
- கி. சீராளன் கவிதைகள்
- வருகல் ஆறு
- நொடிகள் கழிவுப் பொருள்களாய்
- முடிவுக்காலமே வைட்டமின்
- ஓவியம்
- காலப்பிழை
- எதிரேறும் மீன்கள்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 13
- புழுத் துளைகள் – 2
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு (நிறைவடைந்தது)
- ‘பச்சை ‘ மணிக்கிளியே!
- நோயுற்ற ஆசிரியர் (கதை — 02)
- பனியில் விழுந்த மனிதர்கள்
- ‘டென்ஸ் நே ப்யார் கியா! ‘
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 18
- தீக்குள் விரலை வைத்தால்.
- களிமேடு காளியம்மாள்
- இருபது/இருபது (தொடர்ச்சி…)
- விலக்கப்பட்ட கனி
- திரை விலகியது
- ஈஸ்ரர் தினம்: அதன் வரலாறும் முக்கியத்துவமும்
- மெல்லத் தமிழினிச் சாகுமோ ? ( ‘யாருக்குமேயான ‘ பதிலல்லாத ஒரு மீள்பார்வை மட்டுமே)
- சென்ற வாரங்களில் – ஏப்ரல் 1, 2004, பெண்கள் பெண்கள் பெண்கள்
- நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 3
- கர்ப்பத்தடையும் கத்தோலிக்கரும்
- சூடானில் கறுப்பினத்தவருக்கு எதிரான தொடரும் இனப்படுகொலை
- வாரபலன் ஏப்ரல் 1, 2004, கேரளக்கூட்டு, கன்னடக்களி, கானமேளா, மம்முட்டி, அனந்தமூர்த்தி
- பொறியியல் அற்புதச் சாதனையான அமெரிக்காவின் பொன்வாயில் ஊஞ்சல் பாலம்
(San Francisco Golden Gate Suspension Bridge)
நாவாந்துறை டானியல் ஜீவா

கனவுருகும்
காலைப் பொழுதில்..
அவள் வந்து போவள்.. ..
நானிருக்கும் தேசம்@
நீண்ட இருளில்
மூழ்கும் போது…
காதல் எப்படி
என்னுள்…
எழுச்சிகொள்ளும்..
எழுதுவதற்கும்
எழும்புவதற்கும்..
சோம்பறித்தனத்தில்
கண்களை மூடிக் கொண்டு
கட்டிலில்
உடலைத்தளரவிட்டேன்.
ஓசையற்று@
உறங்கிக் கிடந்த
எனது ஊாில்
அந்நிய முகங்களைக்கண்டு
அவசரமாய்@
நாய்கள்; ஊளையிட
ஊரெவிழித்தது.
இன்று மட்டுமல்ல@
எங்கள் வாழ்வே
இப்படியாகிவிட்டது..
எலிக்காது போல்@
என்காதுகளும்
மனக்கண்களும்
விழித்தன…
எங்கோ..
எழுந்த அழுகுரலோடு
பின்னால் துப்பாக்கி வேட்டு@
தப்பிக்காமல்
தலையை குறிபார்த்திருக்கலாம்.
அதன் பின்
வாகனம்..
இரைச்சலோடு
புறப்பட்ட வேக ஒலியைத்தவிர
அந்தப்பின்னிரவு
அடங்கிப்போனது.
விடிந்ததும்
முகம் கழுவ
முகத்தோடு பலர்..
நானும் அவர்களில்@
ஒருவன.;
காலை விழிப்போடு
காற்றும் வாங்கும்
காலம்@
காலவரையற்று
காணமல் போய் விட்டது.
யாருபெற்ற பிள்ளையோ
நானறியேன்..
வெட்டிப்பிளந்து
வேடிக்கை பார்ப்பதற்காகவ
போசக்குணவுண்டு
பத்து மாதம் சுமந்தாய்
உன் மகனை…
இந்த மண்ணை நேசித்த
இந்முகத்த உன்மகன்
சுக்குநூறாய்
சுருங்கிப் போவதற்காகவ
சுடு மணலில்
நார்க்கடகம் சுமந்து
நாளாந்தம்
மீன் விற்றாய்.
புனிதப் படுகையில்
போர்த்துக்கிடந்த
வெள்ளை மனங்கள்
வெளுத்துப்போனது
எப்படி ?
வாயிருந்தும்
வார்த்தையிழந்து..
எனது வீதியில்
நடைப்பிணமாய்
நான் அலைந்ததை
உனக்குத்தொியுமா ?
இப்போது
உனக்காக எதைச்செய்வேன்
அழுவதைத்தவிர…
***
daniel.jeeva@rogers.com