- யேசுமாதா போன்ற முகம்
- தவறாக ஒரு அடையாளம்
- பதவி உயர்வு
- எங்க ஊரு காதல பத்தி…
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 35
- மாறியது நெஞ்சம், மாற்றியவர் யாரோ
- தோல்விக்குப்பின்
- ஊருப்பொண்ணு
- அன்புடன் இதயம் – 30
- பெரியபுராணம் – 7
- வேறுபாடு….!
- …. ஒரு நகரத்து ஒப்பாரி ….(ராகம் ஒப்பாரி)
- வலை
- வலை
- வீடு
- அமெரிக்கா…! அமெரிக்கா…!!
- நிலாச் சோறு
- நம்பிக்கை துரோகி
- ஈரடி கவிதைகள்
- விடியும்
- துர்நாற்றம்
- ஊரறிய மாலையிட..
- வலை
- காதலன்
- வலை
- நூல் வெளீயிடு
- கவிக்கட்டு 23
- உயிரிடம் ஒரு சந்தேகம்….
- பூச்சிகளின் சுய மருத்துவம்
- சென்னை நீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க கடல்நீரைக் குடிநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உருவாகட்டும் [Desalination Plants for Chennai
- மஞ்சுளா நவநீதனின் தேடலும் இடறலும்
- இந்த வாரம் இப்படி (செம்டம்பர் 2, 2004) கலைஞர் காணும் காட்டுமிராண்டித்தனம், நேபாளிகள் ஈராக்கில் கொலை, இந்தியர்கள் விடுதலை, சிவராஜ
- குடியரசு தலைவர் அப்துல் கலாம் – மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர்
- மாறிவரும் ராஷ்டிரபதி பவன்
- கடவுள் வழிபாடும், தனிநபர் வழிபாடும்
Thinnai – Weekly Tamil Magazine - பொற்கோவின் ‘திருக்குறள் உரை விளக்கம் ‘ – நூல் மதிப்புரை
- சுந்தர.ராமசாமி தொடர்பான சில அவஸ்தைகள்
- சாகர புஷ்பங்கள்
- மெய்மையின் மயக்கம்-15
புகாரி

(நிறைவடைகிறது)
விரல்கள் விரித்து
விரல்கள் கோத்து
விலகா உறவாய்
அன்பே நீயென் உடன் வருவாயா
என் கையளவே நிறைந்த
உன் சந்தோசங்களையும்
உன் கையளவே நிறைந்த
என் சந்தோசங்களையும்
இணைத்த சந்தோசத்தில்
முளைத்த சந்தோசங்கள்
வான்நிறைத்துப் பூப்பதை
வாய்பிளந்து ரசிக்க
அன்பே நீயென் உடன் வருவாயா
கிட்டத்தட்ட நெருக்கமென
கிட்டக்கிட்டக் கிடக்கும்
தண்டவாளத் தொடர்களாய்
நம் இருவர் எண்ணங்களும்
அருகருகே நெருங்கிக் கிடப்பதை
அதிசயமாய்க் கண்டு
அளவற்ற பெருமிதம் கொள்ள
அன்பே நீயென் உடன் வருவாயா
முகமூடி உடுத்தாத
சத்திய முகங்களுடன்
சுத்த பாவங்களை மட்டுமே
சத்தமாய்க் காட்டி
என்றும் நிலைக்கும்
நிதர்சனம் தழுவ
அன்பே நீயென் உடன் வருவாயா
ஊரும் உலகமும்
உறவும் காட்சிகளும்
தப்பும் தவறுமாய் மொழிபெயர்த்தாலும்
நடுநாசி சிவக்க என் செயல் முகர்ந்து
முழுமனம் பூட்டி
உள் நியாயம் புரிந்த
உன் ஆறுதல் பரிசத்தில்
என்னுயிர் காக்க
அன்பே நீயென் உடன் வருவாயா
சரியா – நூறுசதம்
அழகா – அற்புதம்
என்னும்
இதய மலர்வு வார்த்தைகளும்
சரியா – ம்ஹூம்
அழகா – மாற்று
என்னும்
அக்கறை விமரிசனங்களும்
தந்தருள
அன்பே நீயென் உடன் வருவாயா
தன்னம்பிக்கை தத்தளிக்கும்
தோல்வித் தருணங்களில்
உன் நம்பிக்கையோடு
இந்த உலக நம்பிக்கை
அனைத்தையும்
என்னம்பிக்கைக்குள் ஊற்றி ஊற்றி
தைரிய தீபம் ஏற்ற
அன்பே நீயென் உடன் வருவாயா
அருகில் இருந்தாலும்
தூரத்தே வாழ்ந்தாலும்
அதே அடர்வில் அக்கறை சுரந்து
அன்பைப் பொழிய
அன்பே நீயென் உடன் வருவாயா
சுக்கல் சுக்கலாய்
மனம் நொறுங்கிக் கிடக்கும்
இருள் பொழுதுகளில்
நான் மறைத்தாலும்
என் கவலைகள் மோப்பமிட்டு
கருணைக் கரம் நீட்டி
இடர்முள் களைய
அன்பே நீயென் உடன் வருவாயா
இத்தனையும் கொண்ட உன்னை
என் ஆருயிர்ப் பொக்கிசமாய்
ஆராதித்து ஆராதித்து
நான் பாதுகாக்க
அன்பே நீயென் உடன் வருவாயா
*
அன்புடன் புகாரி
buhari@gmail.com