- யேசுமாதா போன்ற முகம்
- தவறாக ஒரு அடையாளம்
- பதவி உயர்வு
- எங்க ஊரு காதல பத்தி…
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 35
- மாறியது நெஞ்சம், மாற்றியவர் யாரோ
- தோல்விக்குப்பின்
- ஊருப்பொண்ணு
- அன்புடன் இதயம் – 30
- பெரியபுராணம் – 7
- வேறுபாடு….!
- …. ஒரு நகரத்து ஒப்பாரி ….(ராகம் ஒப்பாரி)
- வலை
- வலை
- வீடு
- அமெரிக்கா…! அமெரிக்கா…!!
- நிலாச் சோறு
- நம்பிக்கை துரோகி
- ஈரடி கவிதைகள்
- விடியும்
- துர்நாற்றம்
- ஊரறிய மாலையிட..
- வலை
- காதலன்
- வலை
- நூல் வெளீயிடு
- கவிக்கட்டு 23
- உயிரிடம் ஒரு சந்தேகம்….
- பூச்சிகளின் சுய மருத்துவம்
- சென்னை நீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க கடல்நீரைக் குடிநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உருவாகட்டும் [Desalination Plants for Chennai
- மஞ்சுளா நவநீதனின் தேடலும் இடறலும்
- இந்த வாரம் இப்படி (செம்டம்பர் 2, 2004) கலைஞர் காணும் காட்டுமிராண்டித்தனம், நேபாளிகள் ஈராக்கில் கொலை, இந்தியர்கள் விடுதலை, சிவராஜ
- குடியரசு தலைவர் அப்துல் கலாம் – மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர்
- மாறிவரும் ராஷ்டிரபதி பவன்
- கடவுள் வழிபாடும், தனிநபர் வழிபாடும்
Thinnai – Weekly Tamil Magazine - பொற்கோவின் ‘திருக்குறள் உரை விளக்கம் ‘ – நூல் மதிப்புரை
- சுந்தர.ராமசாமி தொடர்பான சில அவஸ்தைகள்
- சாகர புஷ்பங்கள்
- மெய்மையின் மயக்கம்-15
பிச்சினிக்காடு இளங்கோ

இப்படி எழுத
ஓர் அதிகாலை
என்னை உசுப்பியது
கனவோடும்
நனவோடும்
கலந்த தூக்கத்தில்
புரண்டுகிடந்த என்னை
விரட்டியது
இந்த மீண்டபொழுதில்
அந்தத்
தீண்டிய காலங்கள்
கண்கலங்குகின்றன
வடுக்களாகி
வருத்தும்
கடந்த பொழுதுகளின்
கோரிக்கையை
நிராகரிக்க முடியவில்லை
காயப்பட்டுப்போன
எச்சங்கள்
இன்னும்
தீ நாக்குகளாய் இருக்கையில்
சந்தனம் பூசி
மகிழும் மனநிலை
எப்படி
வந்துவிட முடியும் ?
அசைபோட்டுக்கொண்டே
உதிர்க்கிறேன்
புன்னகையை
நியாயப்படுத்தும் வேளையிலும்
கடந்தவை
அப்படி எளிதாய்
மறையும் நீர்க்குமிழிகள் அல்லவே!
செம்புலப்பெயல் நீராய்த்
திரிந்தபொழுதுகளில்
தலைகாட்டிய
நரி முகங்கள்
ஓநாய் நெஞ்சங்கள்
நச்சரிக்கின்றன
தூக்கம் தொலைத்து
நாற்றம் விலக்கி
உதறி எழுகிறேன்
படுக்கையைவிட்டு
—-