- யேசுமாதா போன்ற முகம்
- தவறாக ஒரு அடையாளம்
- பதவி உயர்வு
- எங்க ஊரு காதல பத்தி…
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 35
- மாறியது நெஞ்சம், மாற்றியவர் யாரோ
- தோல்விக்குப்பின்
- ஊருப்பொண்ணு
- அன்புடன் இதயம் – 30
- பெரியபுராணம் – 7
- வேறுபாடு….!
- …. ஒரு நகரத்து ஒப்பாரி ….(ராகம் ஒப்பாரி)
- வலை
- வலை
- வீடு
- அமெரிக்கா…! அமெரிக்கா…!!
- நிலாச் சோறு
- நம்பிக்கை துரோகி
- ஈரடி கவிதைகள்
- விடியும்
- துர்நாற்றம்
- ஊரறிய மாலையிட..
- வலை
- காதலன்
- வலை
- நூல் வெளீயிடு
- கவிக்கட்டு 23
- உயிரிடம் ஒரு சந்தேகம்….
- பூச்சிகளின் சுய மருத்துவம்
- சென்னை நீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க கடல்நீரைக் குடிநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உருவாகட்டும் [Desalination Plants for Chennai
- மஞ்சுளா நவநீதனின் தேடலும் இடறலும்
- இந்த வாரம் இப்படி (செம்டம்பர் 2, 2004) கலைஞர் காணும் காட்டுமிராண்டித்தனம், நேபாளிகள் ஈராக்கில் கொலை, இந்தியர்கள் விடுதலை, சிவராஜ
- குடியரசு தலைவர் அப்துல் கலாம் – மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர்
- மாறிவரும் ராஷ்டிரபதி பவன்
- கடவுள் வழிபாடும், தனிநபர் வழிபாடும்
Thinnai – Weekly Tamil Magazine - பொற்கோவின் ‘திருக்குறள் உரை விளக்கம் ‘ – நூல் மதிப்புரை
- சுந்தர.ராமசாமி தொடர்பான சில அவஸ்தைகள்
- சாகர புஷ்பங்கள்
- மெய்மையின் மயக்கம்-15
குமார் கணேசன்

பாடல்
களம்நிறை பாண்டி நாட்டில்
கனிநிலா ஒளியைக் கொட்ட
குளக்கரை அல்லி மொட்டாய்
குவிந்துமே விண்மீன் சூட்ட
இளம்பிறை இதயம் கூட்டி
இன்னிலா சோறு ஊட்ட
வளர்பிறை கையைக் காட்டி
வாவெனத் தலையை ஆட்ட
உளம்நிறை ஓளவைப் பாட்டி
உவந்துமே குழந்தை நாடி
வளம்நிறை ஆத்தி சூடி
வழங்கினாள் அன்பாய்ச் சீண்டி!
பொருள்
பெளர்ணமி நாளில் ஓர் இளம் தாய் தன் சேய்க்கு நிலாச் சோறுடன் தமிழும் சேர்த்து ஊட்டும் அழகியக் காட்சியினை இந்த ஆறு வரிகள் கொண்ட அறுசீர் விருத்தப் பாடல் விளக்குகிறது.
நெற்களங்கள் நிறைந்த செழிப்பான பாண்டிய நாட்டில் ஒரு பெளர்ணமி நாள். குளக்கரையில் அல்லி மொட்டுக்களைப் போல, ஆகாயக் குளத்தில் விண்மீன் கூட்டங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருக்கின்றன.
இளம்பிறை போன்ற அழகான ஒரு தாய் தன் குழந்தைக்கு நிலாச் சோறு ஊட்டுகிறாள். நிலவில் தோன்றும் நிழல் உருவத்தை “ஒளவைப் பாட்டி” எனச் சொல்லி தமிழ் உணவோடு, தமிழ் உணர்வையும் கூட்டுகிறாள்.
இவ்வாறு ஓர் இளம் மாலைப் பொழுதில், பெளர்ணமி நாளில், வளர்பிறை போன்ற தன் குழந்தைக்கு நிலாச்சோறு ஊட்டும் பொழுது, குழந்தை முழு நிலவை, குறிப்பாக ஒளவையின் திருவுருவை, பார்த்து கையைக்காட்டி தலையை அசைத்து “வா, வா” என அழைக்கிறது.
அறிவும் அடக்கமும் நிறைந்த ஒளவைப் பாட்டியும் , அகங்காரம், ஆணவம் எதுவுமின்றி, மனம் மகிழ்ந்து குழந்தையை நாடி அன்போடு அதைக் கொஞ்சி வளம் நிறைந்த ஆத்திச் சூடி சொல்லித் தருகிறாள்.
இவ்வாறு, நிலாச்சோறு ஊட்டும் அழகுடன் பாண்டிய மன்னனின்
ஆட்சியில், தமிழ் நாட்டின் செழிப்பையும், மக்களின் தமிழ்ப் பற்றையும்,
தமிழ் பெரும் புலவர்களின் அறிவு, அடக்கம், ஆணவமின்மை போன்ற பண்புகளையும்; இப்பாடல் விளக்குகிறது.