- அக்டோபர் 2008 வார்த்தை இதழில்…
- புறம்போக்கு
- மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 5
- விஸ்வரூபம் – அத்தியாயம் பதினொன்று
- கழுதை ஏர் உழவு!
- எனது வாழ்க்கையின் 3 தவறுகள் ( பிசினஸ்- கிரிக்கெட்-மதம்)The Three mistake of my life – By chetan Bhagat
- ’எண்’ மகன். நாடகம்- பரீக்ஷா
- காதல் வழிப்போக்கனோடு நடந்துவரும் இயற்கை
- உங்களை என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும் கவிதை…
- என்னோடு வா ! பாப்லோ நெருடாவின் கவிதைகள் -7
- இழப்பு
- “கந்தர்வன் நினைவு தமுஎச சிறுகதைப் போட்டி-2008” முடிவுகள்:
- என் கேள்வி இங்கே ! உன் பதில் எங்கே ?
- கடவுளின் காலடிச் சத்தம் – 1
- சந்திப்புக்கு அடுத்து பிரிவு
- ஆக்ரமிப்பு…,
- விரிக்கும் நிழலில் தேவதையின் சிறகு
- கறுத்த நாயும் பாத்றூமும்
- பிரதியின் உள்ளர்த்தமும்,வெளியர்த்தமும்: மாற்றிலக்கணத்தின் புரிதலில்
- வேதவனம் விருட்சம் 7
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! இரு கருந்துளைகள் மோதினால் என்ன நேரிடும் ? [கட்டுரை: 43]
- இழப்பு
- ரத்தக் கோபம் / கொப்பரைசில் /பிறந்தபோது
- திருமணம்
- விட்டுவிடுங்கள்
- நம்பிக்கை இயந்திரங்கள்(Belief Engines)
- தப்பூ சங்கர்களின் தப்பு தாளங்கள்
- இந்திய இலக்கியம் – வாழ்க்கைக் கூறுகளும் பண்பும் – (2)
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்று நாடகம்) காட்சி -1 பாகம் -1
- வின்சென்டின் அனுபவக் குதிர்
- சிங்கப்பூர் வீரபத்திரகாளியம்மன் கோவில் எதிரில் தீபாவளி பட்டிமன்றம்
- தாகூரின் கீதங்கள் – 52 அச்சம் எனக்கில்லை இனி !
- அப்பாவி நாவுகள்
- யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன அரங்கு :
- தா.இராமலிங்கத்தின் கவிதைகள் காமம், இனவுணர்வு, ஆன்மீகம்-மானிட முழுமையின் செழுமையான வெளிப்பாடு
- நறுக் கவிதைகள்
- தமிழ்நாட்டின் சித்தர்களும் சூஃபியர்களும்
- நூல் வெளியீட்டு, அறிமுக விழா
- புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல்
- புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல் – 2
- வரவேற்பின்மை
- பெண்மை விலங்கில்
- நேற்றிருந்தோம் 12-10-2008 , மாலை 4:30 க்குத் துவங்க இருக்கும் கூட்டத்திற்கான அழைப்பு:
- அண்ணா நூற்றாண்டு: ஒரு வரலாற்றுப் பார்வை
- பெண் படைப்புலகம் இன்று- சமகால கருத்தரங்கம்
கவிதா நோர்வே

இரு கோல்கள் சங்கமிக்கும்
வழிமண்டலம்
இரு துருவங்கள் இணையும்
மையப்புள்ளி
வேற்றுகிரகத்து மனிதர்களாய்
முதல் சந்திப்பின்
ஆய்வுகள் இனிப்பதில்
அவசர இணைப்பு நடைபெறுகிறது
தன் உடமை காத்தல்
வாரிசு உறுதிப்படுத்தல்
கற்பென்ற பேரில் காப்புரிமை
ஆணுக்கும்
கலாச்சாரம் பேணல்
பண்பாடு ஊட்டல்
எனக்குமட்டும் என்ற நம்பிக்கை
பெண்ணுக்கும்
சொத்துக்கள் பெருக்கவும்
வாரிசு வளர்க்கவும்
நியமிக்கப்படும்
இரு அதிகாரிகளின்
குடும்ப ஸ்;தாபனம்
எப்பொழுதுமே
மேலதிகாரியாய் அமர்த்தப்படுகிறான்
அவன்
மரபுகளை முறித்துக்கொண்டு
துளிர்த்த காதலையே
சருகாக்கும் திருமணஸ்தாபனத்திம்
கல்யாண மேடையில்
எப்போதுமே ராஜா வேஷம்
அவனுக்கு
காதலும் வேஷம் போடுமிடத்து
இருவருமே கைதேர்ந்த நடிகர்கள்
ஒருவனுக்கு ஒருத்தியென்றது
கட்டாயப்படுத்தலாய் அமுழுக்கு வருகிறது
இரகசியத்தில் திருத்தியெழுதப்படுகிறது
பழைய தீர்ப்புகள்
இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை
என்ற பொழுது
திருமணம் ஒரு நல்ல வழிதான்
இல்லையென்றால்
காதலுடன் வாழ
கல்யாணமெதற்காம்?
இருந்தும்
நிறுவப்படுகின்றன
புதிய புதிய நிறுவனங்கள்
பெரிசுகளின் வழிநடத்தலில்
பின்னே செல்ல
அத்தனையும் ஆட்டுமந்தைகள்
kavithai1@hotmail.com
திருமணம்