This entry is in the series 20081009_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி



புலன்களின் ஆக்ரமிப்பு பற்றி
பொருட்படுத்துவதில்லை நீங்கள்.

புலன்களின் ஆக்ரமிப்பு பற்றி
புரிவதுமில்லை உங்களுக்கு.

கேட்காத காதுகளில் கேள்வியின்றி
திணித்துக்கொண்டே இருக்கிறீர்கள்.

கண்கள் உங்களை கவனிக்கிறதாவென்று கூட
கவனிப்பதில்லை நீங்கள்.

மற்றொரு காதால் வெளியேற்றப்பட்டாலும்
மறுபடி மறுபடி வந்து ஏற்றிச் செல்கிறீர்கள்.

திறந்தபடி இந்த காதுகள் இருப்பது
திரிந்தலையும் உங்களுக்கு தோதாகவா?


SJEGADHE@tebodinme.ae

Series Navigation