- திருக்குறள் பற்றிக் கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வது சரிதானா ? -திருக்குறள் ஒரு சமண நூலா ?
- குடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு ?
- தமிழ் நாட்டில் தாய்த் தமிழ்ப் பள்ளிகள்
- பாலூட்டும் பூச்சிகள்
- என் ஊர்–அத்தாழநல்லூர்!
- இயற்கைக் காட்சி
- துப்பாக்கி முனையில்….
- புணரி
- நளாயனி
- பாஞ்சாலியின் துயரம்
- டயரி
- யோகத்தின் தத்துவம் (தமிழாக்கம் )
- தலை நகர்த் தமிழ்ச் சங்கத்தில் நூல் திறனாய்வு
- Bonjour le Canada
- மெய்மையின் மயக்கம்-11
- முழு சுகாதார திட்டம்
- மதுரை உயர் நீதிமன்றம்
- தந்தை பெரியார் பிறந்த மண்ணில்
- கல்வி ‘புகட்டுவது ‘ சரியா ?
- பேரீத்த பழங்கள் உதிர்ந்து விழுகின்றன
- இந்தியப் படையே வெளியேறு! -பற்றி எரிகிறது மணிப்பூர்
- சலனங்கள்
- மாலை
- வேடத்தைக் கிழிப்போம்-5 (தொடர் கவிதை)
- காத்திருப்பு
- பார்வைகள்
- றெக்கையில்லா கா(க்கா)கிதங்கள் (நாடகம்)
- இப்படிக்கு தங்கபாண்டி…
- மழை
- ஆண்டாளும் ஆத்தங்கரைச் சாமியும்
- சிதைந்த கனவுகள்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 31
- அவன் ஒரு அகதி
- பெரியபுராணம் – 3
- வறண்டது காவிரி மட்டுமா ?
- அப்பா – ஆலமரம்
- அன்புடன் இதயம் – 26 – தமிழ் இணையம் 2002
- நேசித்தவன்
- திரைகடலோடியும் …
- கவிதைகள்
- தீயே உன்னை வழிபடுகிறேன்…!!!
- கவிக்கட்டு 18 – எங்கே அவர்கள் ?
- வேடம்
- எங்கள் தேசம் இந்திய தேசம்!
- மஸ்னவி கதை — 13 : இப்லீஸும் முஆவியாவும் (தமிழில் )
வை. கலைச்செல்வி

தாய்மொழியின் பெயரைக்கூட
தவறாக உச்சரிக்கும்
உன் குழந்தை.
தற்பெருமை இதில் உனக்கு.
ஐந்து வயதிலேயே
அந்நியமொழி அறிவில்
அசத்திவிடுகிறதென்று.
உண்ணும் முறையிலிருந்து
உணவு வகைகள்வரை
உதறி விட்டாய்
உன்னுடைய தெல்லாம்
உள்ள இடத்துக்கேற்ப
உடுக்கும் உடைகள்கூட,
உன்குடும்பம் முழுதும்.
உனக்கும் உன்துணைக்கும்
உத்தியோக உயர்வே
உன்னத லட்சியம்
‘மெய்ட் ‘-ன் அடிஅணைப்பில்
மெய்யன்பு தேடும்பிள்ளை.
குழந்தை
கற்கும் கலைகள்கூட
உலகத் தரத்திற்கு
உதவாதாம்
உன்னாட்டுச் சரக்கெல்லாம்.
போனமுறை போனபோதுகூட
பள்ளிக்கால நண்பனிடம்
பழகிப்போன ‘தமிங்கிலத்தில் ‘
பீற்றிக் கொண்டாய்,
பத்துப் பதினைந்து வருடமாயிற்றாம்
பழம் பஞ்சாங்கங்களை உதறியெறிந்து.
ஆஹா,
என்ன இறுமாப்பு !
பதினாறில் பெண் ‘டேட்டிங் ‘போக
பதறிப் போய்விடுகிறாய் !
பண்பாடு பேசுகிறாய் !
‘புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும்
புலையராகி வாழலாமா ? ‘
புரியாத வேதாந்தம்
பிள்ளையிடம் பேசுகிறாய் !
என்ன கூத்து இது ?
புல்லும் திங்க வேணும்,
புலியென்று பேரும் வேணும் ! !
தமிழா ,
புரியவில்லை உன் போக்கு .
—- வை. கலைச்செல்வி , சிங்கப்பூர் . —-
girijanathan@yahoo.com