- மஸ்னவி கதை — 13 : இப்லீஸும் முஆவியாவும் (தமிழில் )
- அவன் ஒரு அகதி
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 31
- சிதைந்த கனவுகள்
- ஆண்டாளும் ஆத்தங்கரைச் சாமியும்
- மழை
- இப்படிக்கு தங்கபாண்டி…
- றெக்கையில்லா கா(க்கா)கிதங்கள் (நாடகம்)
- பார்வைகள்
- காத்திருப்பு
- பெரியபுராணம் – 3
- வறண்டது காவிரி மட்டுமா ?
- எங்கள் தேசம் இந்திய தேசம்!
- வேடம்
- கவிக்கட்டு 18 – எங்கே அவர்கள் ?
- தீயே உன்னை வழிபடுகிறேன்…!!!
- கவிதைகள்
- திரைகடலோடியும் …
- நேசித்தவன்
- அன்புடன் இதயம் – 26 – தமிழ் இணையம் 2002
- அப்பா – ஆலமரம்
- வேடத்தைக் கிழிப்போம்-5 (தொடர் கவிதை)
- மாலை
- சலனங்கள்
- பாஞ்சாலியின் துயரம்
- நளாயனி
- புணரி
- துப்பாக்கி முனையில்….
- இயற்கைக் காட்சி
- என் ஊர்–அத்தாழநல்லூர்!
- பாலூட்டும் பூச்சிகள்
- தமிழ் நாட்டில் தாய்த் தமிழ்ப் பள்ளிகள்
- குடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு ?
- டயரி
- யோகத்தின் தத்துவம் (தமிழாக்கம் )
- இந்தியப் படையே வெளியேறு! -பற்றி எரிகிறது மணிப்பூர்
- பேரீத்த பழங்கள் உதிர்ந்து விழுகின்றன
- கல்வி ‘புகட்டுவது ‘ சரியா ?
- தந்தை பெரியார் பிறந்த மண்ணில்
- மதுரை உயர் நீதிமன்றம்
- முழு சுகாதார திட்டம்
- மெய்மையின் மயக்கம்-11
- Bonjour le Canada
- தலை நகர்த் தமிழ்ச் சங்கத்தில் நூல் திறனாய்வு
- திருக்குறள் பற்றிக் கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வது சரிதானா ? -திருக்குறள் ஒரு சமண நூலா ?
பூரணி

—-
அரசர்கள் சுயம்வரம் ஏற்படுத்துதல் தங்கள்
பெருமையைக் காட்டவேயன்றி
பெண்கள் சுயமாக வரன் தேட அல்ல,
மாலை கையிலேந்தி மண்டபத்தில் சிலைபோல
மெளனமாக நின்றிருந்தேன் நான்
எதிரே அரசர் கூட்டம்,
அந்தணர் வேடத்தில் ஐவர்;
புரிந்துவிட்டது எனக்கு
பாண்டவர்கள் அவர்கள் என்று.
அர்ச்சுனன் அழகன், வீரன்
என்றபோதிலும்
பெண்சபலம் கொண்ட அவனை
என் மனம் விரும்பவில்லை.
அழகும் வீரமும் நேர்மையும் உள்ள
கர்ணனை என் மனம் நாடினாலும்
தாய் தந்தை அறியாத் தேரோட்டி
வளர்ப்பு மகன்.
சங்கட மனநிலையில் நான்
செறுக்கோடு எழுந்தான் கர்ணன்
சட்டெனத் தடுத்தார்
‘போட்டியில் உனக்கு இடமில்லை ‘ யென்று
அவமானத்தால் முகம் வெளிறி
அமர்ந்தான்.
அர்ச்சுனன் வென்றான்
அந்தணன் வேடத்தில்,
மனம் வெறுத்தாலும் மணந்தேன்
மறுப்புச்சொல்ல வழியின்றி.
குந்தியவள் என்னை
சொந்தமாக்கிவிட்டாள் தன்
ஐந்து மகன்களுக்கும்.
பெரிய மகன் சூதாடி
அடுத்தவன் அரக்கியின் கணவன்
காண்டாபனுக்கோ கணக்கற்ற மனைவிகள்
எல்லோருக்கும் கீழ்ப்படியும்
சின்னப் பிள்ளைகள் நகுல சகாதேவர்கள்!
என் வாழ்வின் சோகத்துக்கு
இவைகள் போதாதா ?
____
nagarajan62@vsnl.net