- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தில் எதிர்ப்பிண்டம் (Antimatter) பெருகியுள்ளதா ? (கட்டுரை 50 பாகம் -4)
- வேத வனம் விருட்சம் 22
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -22 << அழகி ஒரு பெண் நெருப்பு ! >>
- கலில் கிப்ரான் கவிதைகள் என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே !
- என் காது செவிடான காரணம்
- வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்
- மோந்தோ -3-2
- சாத்தான்களின் உலகம்
- திருப்புமுனை -1
- திருப்புமுனை – 2
- மோந்தோ -3 – 1
- “மனிதர்கள் பல விதம் இவன் ஒரு விதம்”
- ஆறாம் விரலும் புகை மண்டலமும்
- மெளனமாய் இருந்ததில்லை கடல்.
- பேச்சுத்துணை…
- ஏதேதோ…
- நாகேஷ் – ஒரு கலை அஞ்சலி
- நாகேஷ்
- ஈழ அரசியல் நிரந்தர போர்நிறுத்தம்
- தமிழநம்பி அவர்களை பாராட்டுகிறேன்.
- உள் பயணம்
- இரயில் பயணங்களில்
- ஒரு நேசத்தின் மிச்சம்
- பரிமள விலாஸ்
- அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்
- தட்சணை
- பகத்சிங் நூற்றாண்டு விழா பொங்கல் விழா
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய நான்காவது குறும்பட வட்டம்
- சங்கச் சுரங்கம் – 1 : ஓரிற்பிச்சை
- காந்தியின் மரணம்
- சிநேகிதனைத் தொலைத்தவன்
- சர்வோதயா தினத்தில் தேசத்தந்தைக்கு சேவாலயாவின் அஞ்சலி
- எல்லைகள் இல்லா உலகம்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -3 பாகம் -3
ஹெச்.ஜி.ரசூல்

கடலின் உள் ஆழங்களிலிருந்து
கூட்டங் கூட்டமாய் எழுந்து வந்த
வினோதப் பறவைகளின்
அலகுகளிலும்
கால்களின் இடுக்குகளிலும்
விசித்திரக் கற்கள்
வானுயர்ந்த சிறகசைப்பின் பறத்தலில்
வீசி எறிந்து சிரிக்கின்றன.
கல் விழுந்த உடல்
தீப்பிடித்துச் சாம்பலாக
எங்கும்பரவுகிறது குதூகலம்
நீந்திக் கொண்டிருந்த சிறகுகள்
கடல் பாறைகளின் மீது மோதி
நீரோடு போராடி
பெரிய மீன்களின் செவிள்களில்
சிக்கிக் கிடந்தன.
தீராத அலைகளின் வழி சுழிகடந்து
வலைகளை அறுக்கமுடியாமல்
தவித்து
மீளமுடியாததொரு இருப்பின் வலி.
இரக்கம் காட்டும் முகபாவத்தோடு
வேடிக்கை பார்த்துக் கொண்டு
கரையில் நின்ற உன்னால்
மரணப் பல்லக்கு ஒன்றோடு மட்டுமே
நிற்க முடிந்தது.
என்றும் மெளனமாய்
இருந்ததில்லை கடல்.