- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தில் எதிர்ப்பிண்டம் (Antimatter) பெருகியுள்ளதா ? (கட்டுரை 50 பாகம் -4)
- வேத வனம் விருட்சம் 22
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -22 << அழகி ஒரு பெண் நெருப்பு ! >>
- கலில் கிப்ரான் கவிதைகள் என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே !
- என் காது செவிடான காரணம்
- வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்
- மோந்தோ -3-2
- சாத்தான்களின் உலகம்
- திருப்புமுனை -1
- திருப்புமுனை – 2
- மோந்தோ -3 – 1
- “மனிதர்கள் பல விதம் இவன் ஒரு விதம்”
- ஆறாம் விரலும் புகை மண்டலமும்
- மெளனமாய் இருந்ததில்லை கடல்.
- பேச்சுத்துணை…
- ஏதேதோ…
- நாகேஷ் – ஒரு கலை அஞ்சலி
- நாகேஷ்
- ஈழ அரசியல் நிரந்தர போர்நிறுத்தம்
- தமிழநம்பி அவர்களை பாராட்டுகிறேன்.
- உள் பயணம்
- இரயில் பயணங்களில்
- ஒரு நேசத்தின் மிச்சம்
- பரிமள விலாஸ்
- அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்
- தட்சணை
- பகத்சிங் நூற்றாண்டு விழா பொங்கல் விழா
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய நான்காவது குறும்பட வட்டம்
- சங்கச் சுரங்கம் – 1 : ஓரிற்பிச்சை
- காந்தியின் மரணம்
- சிநேகிதனைத் தொலைத்தவன்
- சர்வோதயா தினத்தில் தேசத்தந்தைக்கு சேவாலயாவின் அஞ்சலி
- எல்லைகள் இல்லா உலகம்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -3 பாகம் -3
துவாரகன்
துவாரகன்
02.02.2009
மனிதர்களைப் போலவே
வருகின்ற துன்பங்களுக்கும்
கொஞ்சமும் இரக்கமில்லை.
எப்படித்தான்
எல்லாத்துயரங்களும்
ஒன்றாய்த் திரண்டு விடுகின்றன?
சுடுகாட்டில் அடக்கம் செய்ய
ஆயத்தமாகிய பிணத்தின் முன்
கொள்ளிக்குடம் சுற்றிக் கொள்ளும் உணர்வுடனே
எங்களின் காலங்கள் கழிந்து கொள்கின்றன.
இத்துயரங்களைப் போலவே
அதை வருவித்துக் கொள்ளும் மனிதர்களுக்கும் கூட
கொஞ்சமும் இரக்கமில்லை
வீதியில் வாகனத்தின் சில்லுகளிடையே
நசிந்து செத்துப்போன
ஒரு குட்டிநாயின் வாழ்வுபோல்
நாம் வாழும் காலங்களும் செத்துப் போகின்றன.
யாரிடம் சொல்லி ஆற்றுவது
யார் யாரைத் தேற்றுவது
கொல்லும் வீரியத்தோடு
கோரப்பற்களைக் காட்டியபடி
மரணம் முன்னால் வந்து
எக்காளமிட்டுக் கொக்கரிக்கிறது.
மரணத்தின் கூரிய நகங்கள்
எம் தொண்டைக்குழியில் ஆழ இறங்குகின்றன.
அதன் கடைவாய் வழியாகவும்
நாக்குகளின் மீதாகவும்
இரத்த நெடி வீசியபடியே உள்ளது
எங்கும் மரண ஓலம்
எங்கும் சாவின் எச்சம்
எங்கள் வாழ்வுக்காக
இன்னமும் வாழும் ஆசையுடன்
அம்மணமாய் நின்று உயிர்ப்பிச்சை கேட்கின்றோம்.
கைநீட்டி அழைக்கும் கரங்களுக்கு நடுவிலும்
குறிபார்த்தபடி குறுவாள் ஒளிந்திருக்கிறது
இது சாத்தான்களின் உலகம் என்பதால்
கடவுளர்களுக்குக்கூட
வேலையில்லாமற் போய்விட்டது.
300120092005