- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தில் எதிர்ப்பிண்டம் (Antimatter) பெருகியுள்ளதா ? (கட்டுரை 50 பாகம் -4)
- வேத வனம் விருட்சம் 22
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -22 << அழகி ஒரு பெண் நெருப்பு ! >>
- கலில் கிப்ரான் கவிதைகள் என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே !
- என் காது செவிடான காரணம்
- வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்
- மோந்தோ -3-2
- சாத்தான்களின் உலகம்
- திருப்புமுனை -1
- திருப்புமுனை – 2
- மோந்தோ -3 – 1
- “மனிதர்கள் பல விதம் இவன் ஒரு விதம்”
- ஆறாம் விரலும் புகை மண்டலமும்
- மெளனமாய் இருந்ததில்லை கடல்.
- பேச்சுத்துணை…
- ஏதேதோ…
- நாகேஷ் – ஒரு கலை அஞ்சலி
- நாகேஷ்
- ஈழ அரசியல் நிரந்தர போர்நிறுத்தம்
- தமிழநம்பி அவர்களை பாராட்டுகிறேன்.
- உள் பயணம்
- இரயில் பயணங்களில்
- ஒரு நேசத்தின் மிச்சம்
- பரிமள விலாஸ்
- அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்
- தட்சணை
- பகத்சிங் நூற்றாண்டு விழா பொங்கல் விழா
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய நான்காவது குறும்பட வட்டம்
- சங்கச் சுரங்கம் – 1 : ஓரிற்பிச்சை
- காந்தியின் மரணம்
- சிநேகிதனைத் தொலைத்தவன்
- சர்வோதயா தினத்தில் தேசத்தந்தைக்கு சேவாலயாவின் அஞ்சலி
- எல்லைகள் இல்லா உலகம்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -3 பாகம் -3
வே பிச்சுமணி

வேடன்தாங்கல் பறவைகளே
வாழ்க்கையின் உண்மைகளை
உலகில் பரப்புரை செய்பவர்களே
ஆறாம் அறிவின்
கற்பனை எல்லை கோடுகளை
விடுதலை சின்னமான இறக்கைகளால்
அழித்த அன்பு பறவைகளே
உங்களுக்கும் தாயகம் தமிழ்தானே
ஆதலால் புலம் பெயர்ந்து பறக்றீர்களோ
நீங்கள் விடுதலை உணர்வுடன்
நாங்கள் தாயகத்திலும் அகதிகளாய்
உங்கள் கூடுகள்
வேடர்களால் கூட அழிக்கபடுவதிலை
எங்கள் வீடுகள்
ஆள்பவர்களால் அழிக்கப்படுகின்றன
எங்களுக்கு எல்லைகள் உண்டு
எங்களுக்கு சிறகுகள் இல்லை
எங்களுக்கு ஆறாம் அறிவும் உண்டு
எங்களுக்கு உலகமே இல்லை
எல்லைகள் இல்லா உலகம்
யாதும் ஊரே யாவரும் கேளீர்
தமிழ் கவிகளின் ஆசை
இப்படியா நிறைவேற வேண்டும்
எல்லைகள் இல்லா உலகில்
வேடந்தாங்கல் பறவைகளாய்
மனிதன் விடுதலை பெறவேண்டும்
அந்த நாள் வரும் வரை
அகதிகளாய் சில இனங்கள் ……….