- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 9- கண்ணை மறைத்த ஆக்ரோஷப் புயல்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 4 காட்சி 2
- பெருஞ்சித்திரனாரின் பள்ளிப்பறவைகள்
- மலேஷிய தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு
- வளரும் வலிகள்
- ‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 1 -தேவன்
- கடிதம்
- பன்னாட்டுக் கருத்தரங்கம்
- டிசம்பர் 1 எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் : எச் ஐ வி/ எய்ட்ஸ் சிகிச்சையில் இன்றைய சவால்கள்
- தைவான் நாடோடிக் கதைகள் (2)
- நூலகம் எனும் அன்னை
- கடிதம்
- “பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள்” – மார்வின் ஹாரிஸ் சொல்ல மறந்த கதை
- அக்கினிப் பூக்கள் – 2
- தாகூரின் கீதங்கள் – 5 உன்னுருவில் என் வடிவம் !
- சூரன் போர்
- சிறுகதை என்னம் களம் துரும்படியில் யானை படுத்திருக்கும்
- மாத்தா ஹரி அத்தியாயம் -38
- அத்தையம்மா!
- குறிப்பேட்டுப் பதிவுகள் – 3
- படித்ததும் புரிந்ததும்..(12) வன்முறை – உதிரிப்பூக்கள் – மீடியர்
- பாத்திரத்தில் இல்லை
- Exploitation of Migrant Workers in the United Arab Emirates
- தாழ் படுக்கைகள்
- விமர்சித்தல் லா ச ரா எழுத்தை; லா ச ரா வையல்ல
- Tamil programmes during the Writers Festival
- அறிஞர் மு.சண்முகம் பிள்ளை தமிழகராதி – தமிழ்மாமணி மு.இறைவிழியனார் பாராட்டிய தகுதிமிக்க தமிழகராதி
- ஜெகத் ஜால ஜப்பான் – 2. ஓஹாயோ கோசைமாஸ்
- காதலர் தின’த்தில் ஒரு பேட்டி!
- நாட்டாமை தீர்ப்பை மாத்திப்போடு – 1
- கனவில் நிகழுகிற பயங்கர உலகம்
- மும்பைத் தமிழர் அரசியலும் தாதாக்களும் : (2)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! காலாக்ஸிகளை இயக்கும் கருமைச் சக்தி (Dark Energy) (கட்டுரை: 5)
- பூக்கள்
- மனித வேட்டை
- மூழ்கும் காதல்
சக்தி சக்திதாசன்

கண்மணியே என்னெஞ்சம்
காதலினால் கட்டுண்டது
நிந்தன் நினைவுகள் தந்த
குளிர்மை உடலை வாட்ட
உந்தன் கனவுகள் எனும்
உஷ்ணப் போர்வை தழுவியதே
விழிகள் என்னும் அம்பு
விட்டெறிந்த பார்வைக்
கணைகள் கடந்து சென்ற
கடலின் உள்ளே கண்ணே
கலந்ததெந்தன் பிரிவின்
கண்ணீர்த் துளிகள்
வரலாமா ? என்று கேட்டு
வந்ததல்ல உன்மேல் காதல்
வரட்டுமா? என்று சொல்லிப்
பிரியவில்லை உன் நெஞ்சம்
எதிர்பார்த்து கிடைத்தல்ல
ஏழையெனக்கு உன் காதல்
கொடுத்ததையெல்லாம் தானே
கொடுமையாகப் பறித்துக்
கொண்டே ஓடும் காலம் ஓடுகிறது
ஓடைமேலே நீந்து காகிதக் கப்பலாய்
உன்னினைவைச் சுமந்த வண்ணம்
மூழ்குகின்றதே என் காதல்
sathnel.sakthithasan@bt.com