- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 9- கண்ணை மறைத்த ஆக்ரோஷப் புயல்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 4 காட்சி 2
- பெருஞ்சித்திரனாரின் பள்ளிப்பறவைகள்
- மலேஷிய தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு
- வளரும் வலிகள்
- ‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 1 -தேவன்
- கடிதம்
- பன்னாட்டுக் கருத்தரங்கம்
- டிசம்பர் 1 எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் : எச் ஐ வி/ எய்ட்ஸ் சிகிச்சையில் இன்றைய சவால்கள்
- தைவான் நாடோடிக் கதைகள் (2)
- நூலகம் எனும் அன்னை
- கடிதம்
- “பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள்” – மார்வின் ஹாரிஸ் சொல்ல மறந்த கதை
- அக்கினிப் பூக்கள் – 2
- தாகூரின் கீதங்கள் – 5 உன்னுருவில் என் வடிவம் !
- சூரன் போர்
- சிறுகதை என்னம் களம் துரும்படியில் யானை படுத்திருக்கும்
- மாத்தா ஹரி அத்தியாயம் -38
- அத்தையம்மா!
- குறிப்பேட்டுப் பதிவுகள் – 3
- படித்ததும் புரிந்ததும்..(12) வன்முறை – உதிரிப்பூக்கள் – மீடியர்
- பாத்திரத்தில் இல்லை
- Exploitation of Migrant Workers in the United Arab Emirates
- தாழ் படுக்கைகள்
- விமர்சித்தல் லா ச ரா எழுத்தை; லா ச ரா வையல்ல
- Tamil programmes during the Writers Festival
- அறிஞர் மு.சண்முகம் பிள்ளை தமிழகராதி – தமிழ்மாமணி மு.இறைவிழியனார் பாராட்டிய தகுதிமிக்க தமிழகராதி
- ஜெகத் ஜால ஜப்பான் – 2. ஓஹாயோ கோசைமாஸ்
- காதலர் தின’த்தில் ஒரு பேட்டி!
- நாட்டாமை தீர்ப்பை மாத்திப்போடு – 1
- கனவில் நிகழுகிற பயங்கர உலகம்
- மும்பைத் தமிழர் அரசியலும் தாதாக்களும் : (2)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! காலாக்ஸிகளை இயக்கும் கருமைச் சக்தி (Dark Energy) (கட்டுரை: 5)
- பூக்கள்
- மனித வேட்டை
- மூழ்கும் காதல்
அப்துல் கையூம்

இறைவன்
பிரசுரிக்கும்
இணையில்லா
பத்திரிக்கை
இந்த பூக்கள்.
வெல்வெட்
இதழ்கள்;
வண்ண வண்ண
எழுத்துக்கள்.
அச்சுப்பிழை
இலக்கணப்பிழை
இல்லாத
அழகிய படைப்பு.
காலை பதிப்புமுண்டு
மாலை பதிப்புமுண்டு
விமர்சனங்களுக்கு
அப்பாற்பட்ட
பிரதிகள் இவைகள்
எல்லா மொழியினரும்
புரிந்துக் கொள்ளும்
எளிய மொழிநடை
பரமனின்
பத்திரிகையை
பாமரனும் படிக்கையிலே
பரமசுகம்.
சமயச் சார்பற்ற
சஞ்சிகை இது.
தினசரி
வாராந்தரி
மாதாந்தரி
ஆண்டு மலர்
ஏன் ?
அவனது பிரசுரத்தில்
மாமாங்கத்திற்கு
ஒருமுறை
வெளியாகும்
குறிஞ்சி மலரும் உண்டு
ஆபாசமே இல்லாத
ஒரே மஞ்சள் பத்திரிக்கை
இதுவாகத்தானிருக்கும்
மனிதனின் பத்திரிக்கை
படித்தால்தான்
ஆனந்தம்
இறைவனின்
பத்திரிக்கையை
பார்த்தாலே
பரவசம்
சமயக் குறிப்பு
மருத்துவக் குறிப்பு
வீட்டுக் குறிப்பு
அனைத்தும் உண்டு
பொடி வைத்து எழுதிய
புதுக்கவிதையும் உண்டு
ஆம் ..
மகரந்தப் பொடி
வசீகர நடையில்
வசமிழந்துப்போன
வாசக வண்டினங்கள்
வரிவரியாய்
மனனம் செய்வது
ரீங்காரமாய் காதில் விழும்
தாவரவியல்
மாணவர்களின்
குறிப்புதவி ஏடு
இணையத்து
மின்னிதழோ
இந்த சூரிய காந்தி ?
கதிரவனைக் கண்டதும்
பக்கங்கள்
தானாகவே
திறக்கின்றனவே ?
ஊட்டியில்
ஆண்டுதோறும்
திறந்திருக்கும்
நூலகமொன்றில்
நான் படித்த வாசகம்
“பத்திரிக்கைகளை
புரட்டாதீர்கள்”
Vapuchi @ hotmail.com