- அறிவியல் துளிகள்-8
- சனியின் ஒளிவளையம் நோக்கிய கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் [Christiaan Huygens] (1629-1695)
- இனி, அவள்…
- கொழுத்தாடு பிடிப்பேன்
- வேர்கள்
- வாசனை
- மகள்
- பொங்கல் கவிதைகள்
- பொலிரட்டும் பொங்கல்!!!
- பொங்க லோ பொங்கல்!
- பொங்கல்
- திருப்பிக்கொடு
- ஒரு சந்திப்பு
- பொங்கல்
- எங்கள் ஊர் பொங்கல்!
- பரிணாமம்
- இரண்டு கவிதைகள்
- பசுமையான பொங்கல் நினைவுகள்
- ஜன்னலினூடு பார்த்தல்!
- க(னவு)விதை
- எனக்குப் பிடித்த கதைகள் – 43 தாகூரின் ‘காபூல்காரன் ‘
- மெல்லத் திறக்கும் மனம் ( அபர்ணா சென்னின் Mr & Mrs ஐயர் படத்தை முன்வைத்து சில குறிப்புகள்)
விஜய் ஆனந்த் சி.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்த மண்ணில்
இன்று உழவனின் உடல் உரமாகிறது
‘சோழநாடு சோறுடைத்து ‘ என்று பாடிய ஊர்களில்
உணவில்லாமல் உழவன் தேகம் சாய்கிறது
விருந்தோம்பலில் சிறந்து விளங்கிய தமிழன் வீட்டில்
தன் வயிற்றுக்குக் கூட உணவில்லா நிலை வந்தது
மூன்று போகம் விளைத்த உழவன் நிலத்தில்
ஒறு விளைச்சல் கூட வராமல் பொங்கல் வந்துவிட்டது!
மண்ணை பொன்னாக்கிய பொன்னி நதியை கன்னடன் கட்டிபோட்டுவிட்டான்
அவளை விடுவிக்க வீரப் புதல்வர்கள் இங்கில்லை
அக்காலத்து மன்னாதி மன்னர்கள் இன்றில்லை
நீர்த்தேக்கங்களை நிரப்பும் பருவமழையும் பொய்த்துவிட்டது
அதை பாடி அழைக்க புலவர்கள் இன்றில்லை
சோழமண்ணில் ஊரெல்லாம் இருக்கும் சிவனருள் பெற்ற அடியவரும் இல்லை
ஊரெல்லாம் தனக்கு கோயில்கட்டி
தவறாமல் விழா எடுத்தவனை
காப்பாற்ற ஈசனுக்கு கூட மனமில்லை
ஆயிரம் தொழில் இருந்தாலும் இதுதான் முதன்மை
உழவு இல்லையேல் இல்லை நம் வாழ்க்கை
ஒரு விளைச்சல் கூட பார்க்காமல்
ஒரு போகம் கூட விளையாமல்
அதற்காக பட்ட கடணை அடைக்காமல்
உண்ண உணவில்லாமல்
வாடித் தற்கொலை செய்யும் உழவர் இருக்கும் நிலையில்
தமிழனுக்கு வேண்டுமா இந்தப் பொங்கல் ?
vijayanandc@hotmail.com
