- அறிவியல் துளிகள்-8
- ஒரு சந்திப்பு
- பொங்கல்
- எங்கள் ஊர் பொங்கல்!
- பரிணாமம்
- இரண்டு கவிதைகள்
- பசுமையான பொங்கல் நினைவுகள்
- ஜன்னலினூடு பார்த்தல்!
- க(னவு)விதை
- எனக்குப் பிடித்த கதைகள் – 43 தாகூரின் ‘காபூல்காரன் ‘
- திருப்பிக்கொடு
- பொங்கல்
- சனியின் ஒளிவளையம் நோக்கிய கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் [Christiaan Huygens] (1629-1695)
- இனி, அவள்…
- கொழுத்தாடு பிடிப்பேன்
- வேர்கள்
- வாசனை
- மகள்
- பொங்கல் கவிதைகள்
- பொலிரட்டும் பொங்கல்!!!
- பொங்க லோ பொங்கல்!
- மெல்லத் திறக்கும் மனம் ( அபர்ணா சென்னின் Mr & Mrs ஐயர் படத்தை முன்வைத்து சில குறிப்புகள்)
புஷ்பா கிறிஸ்ரி

பசு மாட்டுச் சாணத்தோடு
களி மண்ணும் கலந்து சேர்த்து
ஆச்சியம்மா அழகாக
வீட்டின் முன் திடல் முற்றத்தில்
திண்ணை மொழுகி,
மண்ணைக் கூட்டிக்
கோலம் போட்டு
கரும்பு இருபுறம் கட்டி
புதுப்பானைக்கு பூக்கள் கட்டி
சந்தனம், குங்குமம் தடவி
புது அடுப்பில் பானை வைத்து
பாலைக் காய்ச்சிப்
பொங்க விட்டு,
பொங்கலோ பொங்கலென்று
புதுப் பச்சையரிசி கூட்டியே
பயறும் சேர்த்துப் போட்டு
சக்கரை, பழம், என்று
சகலதும் போட்டு
தலை வாழை இலை எடுத்து
தங்க மகன் எங்கள்
சூரிய தேவனுக்கு
மனத்து நன்றிகள் பொங்கிட
பொங்கல் படைத்து,
அள்ளித் தந்திட்ட
அன்பான உணவுடன்
ஆச்சியும், அப்பையாவும்
அன்பைக் கூட்டிச்
புத்தம் புதுசாய்
சேர்த்துத் தந்த
பட்டுச் சட்டையும்
கொஞ்சம் காசும், வாங்கி
பாசமாய் வாழ்ந்த நாட்கள்
வந்து போகின்றன மனதில்.
என் குழந்தைகள்,
இனி வரும் காலங்களில்
எனக்கென வரப் போகும்
பேரக்குழந்தைகள் என்று
வரும் நாட்கள் வரை என்
நினைவை விட்டு அகல மறுக்கும்
இனிய பொங்கல் நினைவுகள்..
புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com