- தாய்க்கு ஒரு நாள்
- கலைஞருடன் பேசுங்கள் – மாலன் நிகழ்ச்சி
- நாராயண குரு எனும் இயக்கம்-2
- மதங்கள் அழிக்கப்படவேண்டும்
- வாரபலன் – மே 6,2004 – அ.ஜீ.ரணம் , நிறுத்தமுடியாத நோயாளி டி வி ,நச்சுறவு நிராகரணம்
- குற்றவாளிகள் யார் ?
- இயற்கையே நீயுமா…. ?
- கதவு திறந்தது
- பருந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன…
- கதை 07 : இசைக்கலைஞனின் கதை
- ஜமாலனின் ஆழ் மனத்தில் மதம் நிகழ்த்தும் மாயங்கள்
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 4 :திரு.கருணாநிதியின் சன் டிவி பதில்கள்:
- தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்…
- திருச்சியில் எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல் கருத்தரங்கம்
- சிற்றின்பமும் பேரின்பமும் (தூங்கும் அழகிகள் இல்லம்- புத்தக அறிமுகம்)
- கவிஞர் அன்பாதவனின் நெருப்பில் காய்ச்சிய பறையின் சில அதிர்வுகள்..
- கவிதை உருவான கதை – 5
- ஜெய் ராம்! திரைப்படம் – ஃபாசிசத்தின் இன்னொரு வடிவம்
- மாற்றுக் கருத்துக்கான குரல்(வன்முறை வாழ்க்கை- புத்தக அறிமுகம்)
- அ.முத்துலிங்கம் கதைகள்
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)
- பிறந்த மண்ணுக்கு..- 1
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -18
- விமானப் பயணங்கள்.
- மே நாள்
- முணுமுணுப்பு
- கவிதை
- வீழ்த்துவதேன் ?
- பகை
- கதவாக நான்..
- தாகூரின் நோபல் பரிசைத் திருடியவனே
- பின் நாற்றம்
- கண்ணாடியும் விலங்கும்
- புள்ளிக்கோலம்.
- பனிநிலா
- இடக்கரடக்கல்
- ஈரோப்பை பிரிட்டனுடன் இணைக்கும் உலகிலே நீளமான கடலடி ஈரோக் கணவாய் [World ‘s Longest Subsea Eurotunnel Connecting Britain to Europe
- எழிற்கொள்ளை
- தமிழவன் கவிதைகள்-நான்கு -மணியாட்சி ஸ்டேஷன்
- விதைத்தது
- அன்புடன் இதயம் – 16 – ஐயா, இது அமெரிக்கா
- சத்தியின் கவிக்கட்டு 5
- அட்சய பாத்திரங்கள்…!!!
- நிலவோடு நீ வருவாய்
தமிழவன்

இரண்டாயிரத்து ஒன்றில்
ஒருநாள் ஒடிக்கொண்டிருக்கும் ரயிலில்நான்.
தூரத்தில் வெகுதூரம்
வரை ஏதும் தெரியவில்லை.
ரயிலின் கடகட ஒலிக்கு நடுவில்
வானத்திலிருந்து கவிந்தது மெளனம்
உள்ளில்.
காலம்.
மீண்டும்
மணி பழைய இரும்பால் அடிக்க
புறப்பட்டது ரயில் ஞாபகவெளியில்
எங்கும் யாரும் இல்லை.
நீளமானஅது வளைந்து நகர
முடிந்தமட்டும் உடல் நீட்டிப் பார்த்தேன்
மனிதநடை படாத கல்.
முரட்டுத் தரை.
பசுமையாய் கிடக்கிறது சிந்திய ரத்தம்.
நினைவில் யாரோ சுட்டார்
இரத்தவெள்ளத்தில்
துரை
அதிகாரமற்ற ஈனசுரம்.
தத்தக்கா பித்தக்காவென அவன்
விழுந்தது தாயின் மடியில்
குதிக்கும் ஒரு குழந்தையாய்.
இப்போது ரயில்களைப் பற்றி
யோசிக்கத் தொடங்கினேன்
சாவகாசமாய் அமர்ந்து.
சிரிக்கலானான் பூநூல் தடவும்
ஒரு பிராமண இளைஞன்.
—-
carlossa253@hotmail.com