- தாய்க்கு ஒரு நாள்
- கலைஞருடன் பேசுங்கள் – மாலன் நிகழ்ச்சி
- நாராயண குரு எனும் இயக்கம்-2
- மதங்கள் அழிக்கப்படவேண்டும்
- வாரபலன் – மே 6,2004 – அ.ஜீ.ரணம் , நிறுத்தமுடியாத நோயாளி டி வி ,நச்சுறவு நிராகரணம்
- குற்றவாளிகள் யார் ?
- இயற்கையே நீயுமா…. ?
- கதவு திறந்தது
- பருந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன…
- கதை 07 : இசைக்கலைஞனின் கதை
- ஜமாலனின் ஆழ் மனத்தில் மதம் நிகழ்த்தும் மாயங்கள்
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 4 :திரு.கருணாநிதியின் சன் டிவி பதில்கள்:
- தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்…
- திருச்சியில் எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல் கருத்தரங்கம்
- சிற்றின்பமும் பேரின்பமும் (தூங்கும் அழகிகள் இல்லம்- புத்தக அறிமுகம்)
- கவிஞர் அன்பாதவனின் நெருப்பில் காய்ச்சிய பறையின் சில அதிர்வுகள்..
- கவிதை உருவான கதை – 5
- ஜெய் ராம்! திரைப்படம் – ஃபாசிசத்தின் இன்னொரு வடிவம்
- மாற்றுக் கருத்துக்கான குரல்(வன்முறை வாழ்க்கை- புத்தக அறிமுகம்)
- அ.முத்துலிங்கம் கதைகள்
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)
- பிறந்த மண்ணுக்கு..- 1
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -18
- விமானப் பயணங்கள்.
- மே நாள்
- முணுமுணுப்பு
- கவிதை
- வீழ்த்துவதேன் ?
- பகை
- கதவாக நான்..
- தாகூரின் நோபல் பரிசைத் திருடியவனே
- பின் நாற்றம்
- கண்ணாடியும் விலங்கும்
- புள்ளிக்கோலம்.
- பனிநிலா
- இடக்கரடக்கல்
- ஈரோப்பை பிரிட்டனுடன் இணைக்கும் உலகிலே நீளமான கடலடி ஈரோக் கணவாய் [World ‘s Longest Subsea Eurotunnel Connecting Britain to Europe
- எழிற்கொள்ளை
- தமிழவன் கவிதைகள்-நான்கு -மணியாட்சி ஸ்டேஷன்
- விதைத்தது
- அன்புடன் இதயம் – 16 – ஐயா, இது அமெரிக்கா
- சத்தியின் கவிக்கட்டு 5
- அட்சய பாத்திரங்கள்…!!!
- நிலவோடு நீ வருவாய்
ஸ்ரீமங்கை

விமானங்கள் விரும்பப்பட்டாலும்,
அதன் பயண ஆயத்தங்கள் அஞ்சப்படுகின்றன.
யாரோ தந்த அனுமதியில்
எவர் எவரோ சோதித்து,
சிரிப்புடன் சிலர் அழைத்ததாய் ஆசுவாசித்து,
தேடித் திண்டாடி, அயலார் அறிவித்த எண் கொண்ட
அமிழ்த்தும் இருக்கையில் அமர்ந்தபின்..
தொப்பூளோடு வயிற்றைச் சுற்றி
இருக்கையோடு சேர்த்துக் கட்டும்
பாசப் பட்டையை அணிந்துகொண்டதாய்ப்
பயணம் தொடங்க…
விமானம், பயணிக்காதவர்
சுட்டிய பாதையில்
மூச்சிரைக்க ஓடியோடி
எரிபொருள் கரித்து,
உள் உதைத்து,
பாதையில்லாப் பாதையொன்றில்
சீறிப்பாயும்வரையில்…
அழுத்தம் அதிகம்தான்.
வியர்வைச் சாட்சியாக
இறக்கைகளில் ஈரப் படலம்…
ஆயத்தங்கள் பறப்பதற்கா ?
அன்றிப் பறப்பது, இறங்கும் ஆயத்தங்களுக்கா ?வென
தெரியாமலேயே பயணம் முடித்து
வேறு வெளியில்
இறங்கிச் சென்றாலும்,
மீண்டும் விமானங்களெனில்,
விருப்பம்தான்…
இருக்கைப்பட்டைகளுடன் காத்திருக்கும்
அதன் ஆயத்தங்களை அஞ்சியபோதும்..
—-
kasturisudhakar@yahoo.com