- சாய்ந்த மரம்
- கீதாஞ்சலி (29) புதுப்பித்திடு காலை ஒளியை! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- முக்காலடி
- கனவதே வாழ்வாகி….
- திரவியம்
- நிகழ்வுகள்-2004
- கண்ணதாசா
- ஒளியினை இரத்தல் பற்றி….
- அம்மி
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- 26. சண்டேசுர நாயனார் புராணம் பெரியபுராணம் – 46
- இறகில்லா சின்னப்பறவை
- ஏணி
- கனவு
- அடுத்த ஏழு நாட்கள் ட்ராஃபிக் எப்படி இருக்கும்- ஊகித்துச் சொல்லும் நடைமுறைகள்
- ஒளிநார் வடத்தில் மின்தகவல் தொடர்புகள் (Fibre Optics Communications)
- இடுக்கண் வருங்கால்…
- கடலாமைக் குஞ்சுகள்
- மணி என்ன ஆச்சு ?
- குற்றமும் தண்டனையும் (சிறுகதை)
- ஞானம்
- ஒரு இந்தியக் கனவு
- சந்திரமுக அந்நியன்
- பார்வை
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(ஐந்தாம் காட்சி பாகம்-1)
- இந்த 21ம் நூற்றாண்டிலும் புலத்தில் தமிழ்ப்பெண்கள்
- The Almond: முஸ்லிம் பெண் எழுத்தாளரின் புதிய நாவல்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 7 – கோல்டா மேர்
- சீட் பெல்ட்
- அமெரிக்க வெளியுறவுக்கொள்கையில் தெற்காசியா
- சிங்கப்பூரின் இலக்கியச்சூழல்- திரு. தமிழவன் அவர்களின் கட்டுரைக்கு மறுமொழி!
- உலகத் தமிழ் அடையாளம் என்பது என்ன ?
- ராம்கியின் ‘ரஜினி: ச(கா)ப்தமா ? ‘ – ஒரு பார்வை
- மாயக் கவிதைகளில் மனமிழந்தவர் (விக்ரமாதித்யன் கட்டுரைகள்)
- க.நா.சு. – நினைவோடையில் துலங்கும் முகம்
- இது வரை கவிதை – கருத்தரங்க நிகழ்வுகள்
ரஜித்

ஜூனில் பிறந்த
சூரியனே
வானப் பலகையில்
தமிழ் எழுதினாய்
விண்மீன்களால்
புள்ளியிட்டாய்
கருவூருக்கு முன்னும்
சாவூருக்குப் பின்னும்
பயணித்தாய்
திரை உலகின்
நரை களைந்தாய்
நானூறு ஆண்டின்
அனுபவத்தை
நாற்பதே ஆண்டில்
அடைந்தாய்
அடைந்ததை
அம்பலமாக்கினாய்
விதை மூடிய
கனிகளுக்கிடையே
முந்திரிக்கனி நீ ஆனாய்
பாசத்தை
பாலால் எழுதினாய்
உறவுகளைப் பிரிவுகளை
குருதியால் எழுதினாய்
துக்கங்களை
கண்ணீரால் எழுதினாய்
காதலை
பூக்களால் எழுதினாய்
ஓடப் பயணம்
உன் வாழ்க்கை
ஆடிக் கொண்டே
முடித்தாய்- தமிழை என்றும்
ஆடாமல் பிடித்தாய்
ரஜித்
rajid_ahamed@yahoo.com.sg