- சாய்ந்த மரம்
- கீதாஞ்சலி (29) புதுப்பித்திடு காலை ஒளியை! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- முக்காலடி
- கனவதே வாழ்வாகி….
- திரவியம்
- நிகழ்வுகள்-2004
- கண்ணதாசா
- ஒளியினை இரத்தல் பற்றி….
- அம்மி
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- 26. சண்டேசுர நாயனார் புராணம் பெரியபுராணம் – 46
- இறகில்லா சின்னப்பறவை
- ஏணி
- கனவு
- அடுத்த ஏழு நாட்கள் ட்ராஃபிக் எப்படி இருக்கும்- ஊகித்துச் சொல்லும் நடைமுறைகள்
- ஒளிநார் வடத்தில் மின்தகவல் தொடர்புகள் (Fibre Optics Communications)
- இடுக்கண் வருங்கால்…
- கடலாமைக் குஞ்சுகள்
- மணி என்ன ஆச்சு ?
- குற்றமும் தண்டனையும் (சிறுகதை)
- ஞானம்
- ஒரு இந்தியக் கனவு
- சந்திரமுக அந்நியன்
- பார்வை
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(ஐந்தாம் காட்சி பாகம்-1)
- இந்த 21ம் நூற்றாண்டிலும் புலத்தில் தமிழ்ப்பெண்கள்
- The Almond: முஸ்லிம் பெண் எழுத்தாளரின் புதிய நாவல்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 7 – கோல்டா மேர்
- சீட் பெல்ட்
- அமெரிக்க வெளியுறவுக்கொள்கையில் தெற்காசியா
- சிங்கப்பூரின் இலக்கியச்சூழல்- திரு. தமிழவன் அவர்களின் கட்டுரைக்கு மறுமொழி!
- உலகத் தமிழ் அடையாளம் என்பது என்ன ?
- ராம்கியின் ‘ரஜினி: ச(கா)ப்தமா ? ‘ – ஒரு பார்வை
- மாயக் கவிதைகளில் மனமிழந்தவர் (விக்ரமாதித்யன் கட்டுரைகள்)
- க.நா.சு. – நினைவோடையில் துலங்கும் முகம்
- இது வரை கவிதை – கருத்தரங்க நிகழ்வுகள்
பட்டுக்கோட்டை தமிழ்மதி

விண்ணைத் தொட்டாலும்
உன் கால்கள்
மண்ணில்தான்.
பாதையில் நடக்கும் பாதங்களை
பறப்பதில் பாதியாய்
படிப்படியாய் தொட்டு
அடிஅடியாய்
சிறகடிக்க வைக்கிறாய்.
உயரமேற
உன்னில்
படிப்பினை படிகள்.
பட்டமரமாய் போனாலும்
ஒன்றிணைந்த ஒற்றுமையால்
முடிகிறது உனக்கு
முன்னேற்றிவிட.
உன் கலந்துறவாடல்
காலோடு மட்டும்தானா ?
இல்லை இல்லை
கைகள் உனை பிடித்து நிறுத்த
கைகுலுக்கிக் கொள்கிறாய்.
கால்களை நிறுத்தி
கைதூக்கி விடுகிறாய்.
ஏறிய பின்
மனம் உன்னை மறப்பதுண்டு
ஏறிய ஏற்றம்
நிலையில்லா நிலையில்
உன்
இருகால்கள் தருகிறாய்
இறக்கி விட்டும்
தலைநிமிர வைக்கிறாய்.
ஆணிகள் அறைந்த
தேகம் உனக்கு.
பாரம் சுமக்கிறாய்.
உயரம் ஏற
உன் தோள் கொடுக்கிறாய்.
உன் முகம் தேடுகிறேன்.
உன் முதுகேறி
முகம் திருப்பி
முத்தமிட துடிக்கிறேன்.
முகம் காட்டாமல்
முகம் பார்க்காமல்
என்னை
ஏற்றிவிட்டிருக்கிறாய்
உயரத்திற்கு.
ஏணி நீ.
— பட்டுக்கோட்டை தமிழ்மதி
tamilmathi@tamilmathi.com