This entry is in the series 20070607_Issue

மா.சித்திவினாயகம்


;

முதலில் அந்நகரம்
பிரகாசமாயிருந்தது.

வாரிசாக்கி தத்தெடுக்கப்
பிரியப்பட்டன…
அகதிகள் என்ற பெயரில்!

பிறகு
நம்பிக்கையான வார்த்தைகளுடன்
தன்புணர்ச்சிக்காரர்கள்
அலைந்தார்கள்.
கைகள் கட்டப்படாமலேயே
கைதிகளாக்கிக்
காரியம் பார்த்தார்கள்.

இவைபற்றிப்
பொதுப்படையாகவே
அன்பு காருண்யம்
மனச்சாட்சி இரக்ககுணம்
என்பதாய் நாடுகள்
நாடுகளுக்குள்
பேசிக்கொண்டன.
இறுதியில் தங்கப்பூட்டுப்போட்ட
தனியறைகளுக்கு
சில ..தற்கொலைபுரிந்தன…
சில ..எரிக்கப்பட்டன…
சில ..புதையுண்டன…
மீண்டு இருந்தவைகள்
பைத்தியமாகிச் சிரித்தன!!
மா.சித்திவினாயகம்
(ஒரு அகதியின் டயறி)

—————நன்றி—————–

Series Navigation