This entry is in the series 20091023_Issue

நட்சத்ரவாசி


என் மயிர்கள் அடர்ந்த காட்டின் வழியே

அதன் பாய்ச்சல் துவங்குகிறது

எந்தவொரு முகாந்திரமற்று சிறுகழுகின்

பெருவட்டமடித்தலைப் போல

பெருமும் என் தேகத்தின் உள்ளிடுக்குகளில்

சொற்க்கள் கசிந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றன

ஓடையில் மிதந்து வரும் காகித கப்பலொன்று

எதிர்பாராத தும்பியின் தொடுதலுடன்

வந்து கொண்டிருக்கிறது.

உனது நெருக்கத்தை பகிர்ந்துக் கொள்ள

முடியாத என்னொரு பொழுதும்

போய்க் கொண்டிருக்கிறது

அலைகடல் தொடுதலே அதன் ஆவேச

இலக்காய் இருத்தல் வேண்டும்

கூளாங்கற்களையும்,கோரை புற்களையும்

நகர்த்திக் கொள்ளும் வலிமையுண்டதற்கு

அதன் பாய்ச்சல் மெல்ல கீழ்வானத்தின் மேலேறி

சூரியனையும்,மேகங்களையும் கலைத்து

வானத்தை நோக்கி போகிறது.

யாராவது தடுத்து நிறுத்திடாவிடில்

இரவோ,நிலவோ கடுந்துயராகி

இன்றைய பொழுதோ எரிந்து சாம்பாலாகும்.

என் மயிர்கள் அடர்ந்த காட்டின் வழியே

அதன் பாய்ச்சல் துவங்குகிறது

எந்தவொரு முகாந்திரமற்று சிறுகழுகின்

பெருவட்டமடித்தலைப் போல

பெருமும் என் தேகத்தின் உள்ளிடுக்குகளில்

சொற்க்கள் கசிந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றன

ஓடையில் மிதந்து வரும் காகித கப்பலொன்று

எதிர்பாராத தும்பியின் தொடுதலுடன்

வந்து கொண்டிருக்கிறது.

உனது நெருக்கத்தை பகிர்ந்துக் கொள்ள

முடியாத என்னொரு பொழுதும்

போய்க் கொண்டிருக்கிறது

அலைகடல் தொடுதலே அதன் ஆவேச

இலக்காய் இருத்தல் வேண்டும்

கூளாங்கற்களையும்,கோரை புற்களையும்

நகர்த்திக் கொள்ளும் வலிமையுண்டதற்கு

அதன் பாய்ச்சல் மெல்ல கீழ்வானத்தின் மேலேறி

சூரியனையும்,மேகங்களையும் கலைத்து

வானத்தை நோக்கி போகிறது.

யாராவது தடுத்து நிறுத்திடாவிடில்

இரவோ,நிலவோ கடுந்துயராகி

இன்றைய பொழுதோ எரிந்து சாம்பாலாகும்.

Series Navigation