This entry is in the series 20091023_Issue

ப.மதியழகன்


மிருகஜாதி

சுற்றமும், நட்பும்
எனது ஊனச்சிறகுகளை
அவ்வப்போது
தங்களது கொடிய கரங்களால்
உடைத்தெறிந்துவிட்டு
நினைத்ததை முடித்ததில்
மனநிறைவு கொள்கின்றனர்
நிலை மாறும உலகில்
சற்றே தாழப்பறக்க நேர்ந்தாலும்
என் தலைக்கு மேலே
அவர்களின் உயரம் இருக்கும்படி
கவனமாய் பார்த்துக்கொள்கின்றனர்.

———————–

கானல்நீர்

அடர்ந்த இருள் கவிந்த
வாழ்க்கைப் பாதையில்
நிலைச்சுடரின் பிரகாசம்
கூப்பிடு தொலைவில்
கண்ணில் தெரிந்தது
அதை நோக்கி
எனது கால்கள் குதூகலமாய்
விரைந்து நடக்கத் தொடங்க,
அந்தச் சுடரை நெருங்க நெருங்க
அந்த பேரொளி வெள்ளம்
பின்னோக்கி தனது
கிரணங்களை இழுத்துக்கொண்டது
எனது கஷ்டங்களுக்கு
ஒரு தீர்வென்பது
பாலைவனக் கானல் நீரானது.

mail id:mathi2k9@gmail.com

Series Navigation