This entry is in the series 20040909_Issue

பனசை நடராஜன்


தள்ளாடும் போதையில்
‘தள்ளி வை மதுவை ‘யெனச்
சொல்வோர் கண்டு – உலகம்
‘கொல் ‘லென சிரிக்காதா ?

எழுத்தினில் ஒழுகும் தேன்!
பேச்சினில் கழிவுநீர்!
இயல்பினோர் கருத்தினை
ஏற்கத்தான் செய்யுமா ?

எல்லோர்க்கும் உபதேசம்
சொல்லி பின் சாக்கடையில்
துள்ளி விழுகின்ற பல்லி போல்
அறிவுரை சொல்வோரே
நெறிகெட்டு நடந்திட்டால்

கற்பனை, சிந்தனை
கருத்துக்கள் இருந்தாலும்
அவர்தம் படைப்பினைச்
சொற்களை அடுக்கியக்
குப்பைகள் என்று
கால்ம்…,
தூக்கி எறிந்திடும் தூரமாய்..!

பனசை நடராஜன், சிங்கப்பூர்.
(feenix75@yahoo.co.in)

Series Navigation