- தவறாக ஒரு அடையாளம் (திண்ணை வாசகர்கள் கதையை எப்படி முடிக்க விரும்புவார்கள் என்று அறிந்து கொள்ள ஆசை)
- சொல்லிச் சென்றவள்!
- வேலைக் கிடைத்தும் அல்லல் பட்ட கதை
- ஓயுமா அலை…
- ஒருபக்கச்சிறுகதை – நட்பு
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 34
- இருக்கச் சொல்கிறீர்கள்
- எகினம்
- கிராமத்துப் பார்வைகள்
- சொல்லுக சொல்லில்…
- வென்றிலன் என்ற போதும்…
- பெரியபுராணம் – 6
- என்ன நடந்தது ?
- அயல் பிரிதிபலிப்புகள்
- ஏய் குருவி – கவிக்கட்டு 21
- அநாதை
- எப்போதாவது…
- ஆழி
- வேண்டும் – வேண்டாம்
- அன்றும்…இன்றும்
- ஏழையின் வேண்டுதல்
- அப்பா
- இதயம் உன்னை வரைந்து பார்க்கிறது
- பாவைக்கு இரண்டு பார்வை…! (காதலிக்கச்சொன்ன வள்ளுவர் (110) தொடர்..)
- உடைபடும் குரங்கு
- வெளி….
- பயணம்
- 29. புகலிடம்
- கலைடாஸ்கோப் – ஆகஸ்ட் 26 – இமயமலை ஏரி, ஐசக் நியூட்டனின் இன்னொரு முகம், வேலை வெளியனுப்புதலின் அடுத்த அலை
- சாதாரண தொலைநோக்கி தொலைதூர நட்சத்திரத்தின் கிரகத்தைக் காண்கிறது
- 7. செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம் – செல்பேசிக்குள்ளே!!
- நீர்வளச் செல்வத்தைச் சீர்கேடாக்கும் தொழிற்சாலைகளின் துர்வீச்சுத் துணுக்குகள் [Water Pollutants Created by Industrial Chemical Di
- பூச்சிகளின் மொழிகள்
- அழியாவரம் பெற்ற ஸ்டாலினிசமும் எஸ் வி ராஜதுரையும்
- கலைடாஸ்கோப் – ஆகஸ்ட் 26 – இமயமலை ஏரி, ஐசக் நியூட்டனின் இன்னொரு முகம், வேலை வெளியனுப்புதலின் அடுத்த அலை
- ஜெயலட்சுமி – சீரழிவின் உச்சியில் காவல் துறை, நீதித் துறை, மருத்துவத் துறை
- எய்ட்ஸ் பற்றிய திரைப்படம் – இயக்குனர் ரேவதி – நேர்காணல்
- தமிழ்நாட்டு கட்சிகளை, அமைப்புகளை பிளக்கும் உளவுத்துறை
- போலி மதசார்பற்ற வாதிகளும் , தேசிய கொடியும்
- உள்ளக சுயநிர்ணய உரிமை
- அடையாளம் காட்டும் கையேடு – கவிதை ரசனை -விக்ரமாதித்யன் – நூல் அறிமுகம்
- யோனி பிளஸ் முலை = நாஞ்சிலார் பிளஸ் சிபிச் செல்வன் = பாராட்டுகள்
- துணையாக நிற்கும் வரிகள் -கொங்குதேர் வாழ்க்கை- சிவக்குமார்- நூல் அறிமுகம்
- மெய்மையின் மயக்கம்-14
- ரவி சுப்பிரமணியன் கவிதைகள்
பவளமணி பிரகாசம்

ஆழியே ஆழ்கடலே நிலத்தின் நீராடையே
கரையருகே அலையடித்து ஆரவாரமா
காணா ஆழத்தில் கனமான அமைதியா
அகண்ட உன் அகத்திலே திமிங்கலமும் சுறாவும்
வாழும் போதும் சிப்பியும் சங்கும் சிறுமீனும்
ஓடித்திரிய இடம் இன்னும் மிச்சமிருக்கு
நாடி அணியும் முத்தும் பவளமும் விளைஞ்சிருக்கு
உன் கரிக்கும் நீரையோ குடித்திட முடியாது
ஆயின் நீ தந்த உப்பின்றி உணவில் சுவையேது
உன் சாரம் நீராவியாய் மேகத்தை சூலாக்கி
வரமாக வந்து கொட்டிய மழையமுதாலே
தழைத்து செழித்து பிழைக்குது வையகம்
கண்டங்களை அணைக்கும் உன் கரங்கள்
காதங்களை அளக்கும் நகரொத்த கலங்கள்
வெப்பக்கரையில் நிற்கும் தென்னை மரங்கள்
வெள்ளிப்பனி மூடிய கடுங்குளிர் துருவங்கள்
மாலுமிகளை ஈர்க்கின்றதோர் தீராக்காதல் வலை
மொழிகளை இனங்களை இணைப்பதுன் வேலை
தாலாட்டி ஓடத்தை ஏந்துகின்ற தாயே
தள்ளாடி தடம் புரண்டும் கூட போவாயே
சித்தம் பித்தாகி புரட்டியும் போடுவாயே
ஊரை உருட்டி உலையில் போட்டு முடித்து
கரை தாண்டி கண்டம் விழுங்கி பசியாறி
ஊறு பல செய்து ஊழித்தாண்டவம் ஆடுவாயே
மறைந்திருக்கும் மர்மங்களுக்கு குறைவில்லை
மாண்டுபோனவர் எண்ணிக்கை தெரிவதில்லை
புதையுண்ட செல்வங்களுக்கோர் அளவில்லை
பிறக்கின்ற கற்பனை ஊற்றுக்கோ நிகரில்லை
செம்புலப்பெயநீராம் எம்குலப் பெண்களொத்து
காடு மலை கடந்து வந்த தீஞ்சுவை நதி நீரும்
உன்னில் உவப்பாக கலந்து உவர்ப்பானதுவே
நுரையோடு எழும்பி சளைக்காது தவழ்ந்து வந்து
கரையோடு உடைந்து போவது களிப்பான காட்சியே
எல்லா இனமும் எல்லா தினமும் உன் கரையை நாடுது
உலகே உன்னோடு விளையாடி இளைப்பாறக் கூடுது
ஆழியே எமை மயக்க மந்திரம் என்ன போட்டாயோ
மடியிலே கிடக்க வைக்க தந்திரந்தான் செய்தாயோ
புயலும் மழையும் உன் பொலிவை மாற்றவில்லையே
வள்ளலாய் உனைப் போல் மாற யாம் கற்கவில்லையே
Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com