- மாற மறுக்கும் மனசு
- மொழி
- உயிர்க்கொல்லி
- காம்பின் எடையால் பூவின் இடை ஒடியும்!
- குருவிகள்
- நேர்த்திக்கடன்
- நினைவார்ச்சனை – கவிக்கட்டு 19
- ஆற்றுவெள்ளம் ஆசையானால்
- அடக்கம்
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம் – 6
- தந்தை இல்லா தலைமுறைகள்
- பொடாவுக்கு ஒரு தடா!
- ஜமாத்தின் அதிகாரம் என்ன ? ஜமாத் தேவைதானா ?
- புதுச்சேரி (புதுவை, பாண்டிச்சேரி) நினைவுகள்
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 1
- பேரிடர் விழிப்புணர்வுக் கல்வி
- மெய்மையின் மயக்கம்-12 (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)
- திருக்குறள் ஒரு மறை நூலா ?
- தீர்க்கமும் தரிசனமும்
- ஓட்டம்!
- எலிசெபத் ஏன் அழுதாள்
- கணேஸ்மாமா
- சொர்க்கத்தில் கல்யாணம்
- றெக்கையில்லா கா(க்கா)கிதங்கள் (நாடகம்)
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 32
- நீ சொல்லு
- ஒரு கனவு துகிலுரிகின்றது
- முகவரி
- பயணம்
- வா வா வா…!!!
- சிங்காரச் சிங்கை
- பெரியபுராணம் – 4
- முன்னேற்றம்
- அன்புடன் தாய்க்கு
- சுட்டெரிக்கும் மனசாட்சி
- அன்புடன் இதயம் – 27 – திரும்பிய பயணத்தில் திரும்பாத பட்டங்கள்
- வேடத்தைக் கிழிப்போம்-6 (தொடர் கவிதை)
- தமிழில் பாப்லோ நெருதா: சில குறிப்பகள்.
பனசை நடராஜன்

வளமான நிலமென்றால்
பலத்தாலே வெல்லும்,
இளம்பிள்ளை எளியோரைக்
கணைவீசிக் கொல்லும்,
கலமேறித் தலைகொய்யத்
தொலைதூரம் செல்லும்,
வளர்கின்ற நாட்டுக்குள்
கலகமிடச் சொல்லும்,
அத்துமீறலும், ஆக்கிரமிப்பும்
அப்பட்டமாய் நடந்தும்
ஆதாயம் இல்லையெனில்
பாராமுகம் காட்டும்..
பச்சோந்தி “வல்லரசுகள்”!
பொல்லாங்கு புரியும் இந்த
வல்லோர்க்கு எல்லோரும்
வளைந்திடும் நிலையாலே
கள்ளுண்ட கயவர் போல்
தள்ளாடும் நியாயங்கள்!!
உள்ளத்தில் மனிதர் மேல்
நல்லன்பு உள்ளோர்கள்
வல்லோராய் வளர்ந்தால்தான்…
கலகமில்லா உலகம் தோன்றும்!
வளங்களெல்லாம் செழித்து ஓங்கும்!!
சமத்துவமும், ஒற்றுமையும்
தலைநிமிர்ந்து தழைத்து வாழும்!!!
(தொடரும்)
-பனசை நடராஜன், சிங்கப்பூர்.-
(feenix75@yahoo.co.in)