- சங்கனாச்சேரியும் ‘ஸ்டார்டஸ்டு ‘ம்
- விண்வெளியில் செல்லும் வால்மீன் ஒளிமுகில் மாதிரித் தூளைப் பிடித்து வந்த விண்சிமிழ் (Stardust Space Ship Collects Comet ‘s Coma Sa
- பிரபஞ்சத்தில் ஒரு நீலப்படம் ? (Between the Black-hole and the White-hole there is a Worm-hole)
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-6) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- யமேய்க்கனுடன் சில கணங்கள்!
- வீடற்றவன்…
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 5
- கல்லறைக்குச் செல்லும் வழி (மூலம் : தாமஸ் மன் (ஜெர்மனி) )
- மிட்டாதார்
- முதலாம் தீர்மான கோட்பாடு
- பிளவுண்ட சமூகம் என்பதால் என்றென்றும் பிளவுபட்டிருப்பதா ?
- பிறவழிப் பாதைகள் : அன்புள்ள குட்டி ரேவதி
- சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு!
- தனிநபர்-புரட்சி-முன்னெடுப்பு, சில அபிப்பிராயங்கள்!
- (இங்கிலாந்து இடம் பெறாத) எடின்பரோ குறிப்புகள் – 7
- ஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலா விவாதம் ?
- மாயச் சரக்குப் பெட்டிகள் (Phantom Cargo)
- கைநுனி மின்மினி
- எச்சங்கள் இன்னும்
- கீதாஞ்சலி (58) ஒளிந்திருக்கும் காதலன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- ஈரமான தீ
- அபத்தங்களின் சுகந்தம்
- கவிதைகள்
- பெரியபுராணம் – 74 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- காத்திரு காத்திரு
- சாத்தானுடன் போகும் இரவு
- விதிகளின் மீறுகை
- செரிபடட்டும்
- வீடு
- ஹெச்.ஜி.ரசூல் கவிதைகள்
- ஸி. செளரிராஜன் கவிதைகள்
- இரண்டாம் அர்த்த வரிசையின் கதை- சல்மாவின் நாவலை முன்வைத்து
- துக்கத்தின் அலையோசை – கோகுலக்கண்ணனின் ‘இரவின் ரகசியப் பொழுது ‘
- நான் கண்ட சிஷெல்ஸ் – 7
- மு புஸ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள் ‘
- சி.கனகசபாபதியின் ‘ புனைகதைகள் ‘
- உயிர்ப்பு தொகுப்பின் பத்து சிறுகதைகள்
- சேதிராயர்
- ஜெயமோகனின் கொற்றவை
- சுப்ரபாரதிமணியன் படைப்பு மனத்தின் செயல்பாடுகள்
சாரங்கா தயாநந்தன்

உயிரிலிருந்து ஊறி
ஒருவருக்காய் வழியும்
அன்பெல்லாம்
விழிகளிலே ஆரம்பிக்கிற
விதிமீறி
என்மன விழுகை
உன் கால்களில்
நிகழ்ந்தது.
முறித்து ஆடுகிற உன்
இசைப்பாதங்களில்
தெறித்து விழுந்தது என்மனம்
ஒரு தாளமாக.
பின்னொருநாள்
என் குரல் அழகில்
நீ இசைந்தாய்,
ஆடல் ஆடலையே
வாழ்வின் துணையாய்
விரும்பித் தேரும்
எனும் விதி மீறி.
‘ஏழு ஸ்வரங்களின்
ஆனந்தக் குதிப்பே
எதிர்கால வாழ்வு ‘ எனும்
கனவுத் தேக்கம் நமது.
புரியப்படாத வெளியில்
புரிதலின் நிழற்றல்
இருவர் நெருக்கமுறும் போது
இலகுவாய் நிகழும்
எனும் விதிகருதியும்
பல மகிழ்வுச்சங்களை
மனதிருத்தியும்
மணவாழ்வு நோக்கி நகர்ந்தோம்.
எனினும்
உனது இருப்பை
எனது நெற்றியில் நான்
வரையத் தொடங்கியதும்
ஆபரண வேலிகள் விரும்பாத
என் கழுத்தை நீ
மஞ்சள் கொடியாய்
சுற்றிக் கொண்டதுமான
பொழுதுகளின் ஆரம்பத்தில்
நாம் எண்ணி மகிழ்ந்திருந்த
புரிதல் விதியும் மீறப்பட்டிருந்தது
எம்மிருவர் மனங்களிலும்.
இப்போதும் கூட
எமது இசையும் நடனமும்
வியக்கப்படுகின்றன
பிற புருஷர்களாலும்
பிறன் மனைவிகளாலும்.
—-
nanthasaranga@gmail.com