- ஒரு நாள் கழிந்தது (லண்டனில்)
- ராஜா கவிதைகள்
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தைந்து
- இருப்பின் நிலம்..
- மிதந்தது கொண்டிருந்தது மேகம்
- வீடு
- பின்தொடர்கிறேன்..
- பெண்ணுரிமை – ஒரு சமூகவியல் நோக்கு
- அகில உலக வேகப் பெருக்கி அணு உலைகளின் அகால முடிவுகள் [Fast Breeder Reactors]
- திரைக்குள் பிரதிபலிக்கும் நிழல்
- பின்னிரவின் ஊடலில்…
- உயிர்ப்பு – 2011 அற்புதமான ஒரு கலை நிகழ்ச்சி
- தோழி பொம்மை..:_
- நானென்னை தொலைத்துவிடும்படி
- ஏமாற்றாதே.. ஏமாறாதே
- இலையாய் மிதந்தபடி..
- சிநேகப் பொழுதுகள்!
- வாக்கு பெட்டி
- ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011
- (66) – நினைவுகளின் சுவட்டில்
- ப.மதியழகன் கவிதைகள்
- பரீக்ஷா நாடகம் :
- ராமபிரானை வன்புணர முற்பட்டவள் சூர்ப்பனகை
- கீழவெண்மணி நிகழ்வும் பதிவும்
- உன்னிடம் நான்
- கால தேவா
- “அமீருக்கு இரண்டு பங்கு கேக்!”
- ஓர் பரி ….
- சாட்சி
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நெருப்பின் நடுவில் ! (கவிதை -32 பாகம் -2)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -7
- சுமை தூக்குபவன்
- “தரையில் இறங்கும் விமானங்கள்” நூல் விமர்சனம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -1)
- ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு – பகுதி ஒன்று (1)
- மியம்மார் அருள்மிகு அன்னை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி-அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் தேவஸ்தானங்களின் ஜீரணோத்தார அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகப்
- வன ரகசியம்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -6
- ‘இவர்களது எழுத்துமுறை’ – 34 வாசவன்
- எப்ப போவீங்க..?
- சமுத்திரத்தின் சக்கரவர்த்திகள் முக்குவர் – ‘மறுபக்கத்தின் மறுபக்கம்’ நூல் வெளியீட்டு விழாக்கள்
- காணாமல் போனவைகள்
- வரிக்காடு
- வெங்கட் சாமிநாதன் வாதங்களும் விவாதங்களும் நூல் வெளியீட்டு விழா
- சூரல் பம்பிய சிறுகாண் யாறு 0 நூல் வெளியீட்டு விழா
- வேனில் தமிழ் விழா
ராஜா
______________________________________________________________
வட்டங்களால் ஆனவளுக்கு
______________________________________________________________
உயரம் போதவில்லை
மாடமேறியும் எட்டாக்கனி
எம்பிக் குதிக்கையில்
ஆடை தளர்ந்தது
விடுபட்டதொன்று
உயரப்பறந்து
கொத்தித் திரும்புவதற்குள்
புள்ளிட்ட துளையிலிருந்து
புறப்பட்டது ஓராயிரம்
ஒன்று குறையாமல்
கூடு சேர்ந்ததும்
வட்டங்களால் ஆனவள்
பறந்து போகிறாள்
ஏழ்கடல் மேலே.
_____________________________________
வீட்டிலிருந்து
______________________________________________________________
தெருமுனைவரை
சென்ற தடமொன்று
திரும்பிவிடும் தூரத்தில்தான்
இருக்கிறது
அங்காடித்தெரு ஆரவாரங்களில்
வண்ணமுமிழ் வெளிச்சங்களில்
சற்றே மயங்கும்
ஊரெல்லை தொட்டதும்
பெருமூச்சொன்று
வீடு நோக்கி நகரும்
நிலவொழுகும் ராத்திரியில்
ஓரிலையும் அசையாத மரத்தினடியில்
இளைப்பாறும் சாலை
நத்தைபோலும் பயணிக்கும்
அப்பொழுதுகளில்
தொடுவானம் தாண்டியும்
அது நீண்டிருக்கும்.
______________________________
1.காலங் கடத்த காதல்
1.யாமத்திரி எரிகிறது