- மாற்றம் தானம்
- அந்த மீன்கள்
- மீனாள் பதிப்பகம் வெளியிட்ட நூல் வெளியீட்டு விழா
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம்
- கேள்விகள்
- தட்டான்
- மதிப்புரை: ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்
- தேனீச்சை
- ரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..
- ராஜா கவிதைகள்
- கோநா கவிதைகள்
- குறும்பாக்கள் ஐந்து
- அடிமை நாச்சியார்
- கூடு
- கோவில் மிருகம்-விநாயகமுருகன் கவிதைத் தொகுப்பு-என் பார்வையில்..
- சாரல் இலக்கிய விருது
- சாக்பீஸ் சாம்பலில்.. கவிதைத் தொகுதி எனது பார்வையில்..
- கணினி மேகம் 2
- என் அன்னை கமலாவுக்கு
- அறன்வலி உரைத்தல்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -1)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் ! (கவிதை -39 பாகம் -2)
- ஐந்தாவது சுவர்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -12
- உப்புமா – செய்யாதது
- உறைந்த கணங்கள்
- பேரரசன் பார்த்திருக்கிறான்
- இனிமையானவளே!
- கரையில்லா ஓடங்கள்
- பொங்கலோ பொங்கல்
- பேனா
- வெ.சா.வுக்கு என் ‘தன்னிலை விளக்கம்‘ “டென்னிஸ் இரட்டையர் ஆட்டம்“
- விதுரநீதி விளக்கங்கள் முதல் பகுதி:
- கலையும் கனவு
- பறக்க எத்தனிக்காத பறவை
- 4 கவிதைகள்.
- பொங்கட்டும் புதுவாழ்வு
- பொய்யின் நிறம்..
- விடுமுறைப் பகற்பொழுதுகள்
- நெருப்பு மலர்
- ‘முன்ஷி’ ப்ரேம்ச்ந்த்- இலக்கிய விடிவெள்ளி
- முஹம்மது யூனூஸின் எனது பர்மா குறிப்புகள்-புத்தக மதிப்புரை
- நினைக்க இனிக்கும் நெடுநல்வாடை – அறிமுகமும் ஆய்வுமாயமைந்த செய்யுள் வடிவிலான கட்டுரை…தொடர்ச்சி
- பரிதி மண்டலத்துக்கு அப்பால் பயணம் செய்யும் எதிர்கால அசுர விண்கப்பல்கள் (The Superfast Interstellar Spaceships) (கட்டுரை -2)
சின்னப்பயல்

தானும் பறக்க இயலும்
என்பதை மறந்தே போனது அது.
இறக்கை என்ற ஒன்றை
எதற்கென நினைத்து
விரித்துக்கூட பார்க்கவில்லை அது
கிடைத்தவற்றைக்
கிளறிக்கொண்டிருப்பதிலேயே
சுகம் கொண்டது அது.
பாதுகாப்பான சூழலில்
இருப்பதாகக் கருதிக்கொண்டு
நாட்களைக் கடத்துவதிலேயே
மரத்துப்போனது அது.
சோம்பிக்கிடப்பதே சுகம்
எனக்கொண்டது அது.
கூண்டு விட்டுக் கூண்டு
செல்லும் இட மாற்றங்களை
மறுப்பேதும் தெரிவிக்காமல்
ஏற்றுக்கொண்டது அது.
கால்கள் உடைந்தும்
சிறகுகள் முறிந்ததுமான
தோழி தோழர்களைக்
கொண்டதுமாக
அங்குமிங்கும் அலைந்து
கொண்டேயிருந்தது அது.
“இருத்தல்” போதும்
என அகமகிழ்ந்து இப்போது
கூவுதலையும்
மறந்து அலைகிறது அது.