- கோ.கண்ணனின் கவிதைகள்
- தேவிபாரதியின் “பிறகொரு இரவு” நூல் வெளியீட்டு விழா
- கடித விமர்சனம் – 8 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து) நிறைவு
- நல்லி- திசை எட்டும் – மொழியாக்க விருது விழா
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- BAR1 invites you to attend its first Salon/open studio Bar 1/4 as part of its INDIA- INDIA residency.
- மெளன கோபுரம்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிநான்கு
- கண்டனத்துக்குரிய சில…
- உயிர் தேடும் வண்ணங்கள்
- காணாமல் போனவர்களின் மணல்வெளி
- மிதித்துச் செல்ல ஓர் இலவச ஆல்பம்
- வெட்கமற்றது
- வரவேற்போம், முகம்மது அமீனை.
- ஏலாதி சிந்தனைப்பள்ளி தேசிய பல்துறை ஆய்வரங்கம்
- சாங்கியத் தாயும், சாங்கிய மதமும்.
- பெரியார் பதிப்புரிமை வழக்கு – ஒரு குறிப்பு
- ஆசை
- இது பின்நவீனத்துமல்ல
- இயக்கம்..
- சாகசம்
- பூமி என்னும் வண்ணக்கலவை
- நன்றி, மலர் மன்னன்
- ஆலவாய் – சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்
- மரணத்தைத் தவிர வேறில்லை
- screening of the documentary film Out of Thin Air
- ஆகவே சொல்கிறேன்
- மறு நிர்மாணப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த தேக்கா ஈரச்சந்தை
- மூன்று கவிதைகள்
- ஊகங்களும் ஊடகங்களும்
- வேத வனம் – விருட்சம் 44
- ” புறத்தில் பெருந்திணை “
- ஒலி மிகைத்த மழை
- இயலாமை
- காட்டுமிராண்டி அரபிகளின் இறை வழிபாட்டினைச் செப்பனிட மட்டுமே….
- பறவையின் இறப்பு
- வலியறிதல்
- ஜெயபாரதன் தொடர்கள்
- இறகுப்பந்துவிடு தூது!
- தோற்கப் பழகு!
- மொட்டை மாடி
- நிழலின் ஒளி
- மூன்று கவிதைகள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஆறு
- இரண்டு கவிதைகள்
மனோ.மோகன்
எனது நாட்குறிப்பிலிருந்து சேகரிக்கப்பட்ட
உனது பழைய எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை
மொத்தம் இரண்டாயிரத்து நூற்று தொண்ணூறு
பூச்சிகள் அரித்துச் சிதைந்த எலும்புக்கூடு
மட்கியும் மட்காமல்
சதையொட்டிய எலும்புக்கூடு
வகுப்பறைக்குச் செல்லும் பாவனையில்
நேர்த்தியாகக் கோர்க்கப்பட்ட எலும்புக்கூடு
சில எலும்புக்கூடுகளில்
பற்கள் மட்டுமே எஞ்சியிருந்ததால்
எண்ணிக்கை கூடலாம் குறையலாம்
பொத்தல் விழுந்த குரூர விழிகளுடன்
புன்னகைத்துக் கொண்டே
எனது உறக்கத்தைத் தின்றுகொண்டிருந்த
கீறல் விழுந்த மண்டையோடுகள் சிலவற்றில்
புராதன மொழியில் எழுதப்பட்ட
கனவுகள் பொறிக்கப்பட்டிருந்தன
எழுதப்பட்ட கனவுகளில் சில
கடவுளின் பெயரால் புனையப்பட்ட தொல்கதைகளாயிருந்ததையும்
தொல்கதையிலுலவும் கடவுளரனைவரும்
உனது பெயரில் இருந்ததையும்
கல்வெட்டு ஆய்வாளர் சொல்லிப் போனார்
வரலாற்றாஸிரியருக்குத் தெரிய வராத
இருண்டகாலக் குறிப்புகளடங்கிய
உனது ஆவணங்களுக்கென
அருங்காட்சியகம் அமைக்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தேன்
நீ உயிர்த்தெழுந்து வருவதற்குள்
உனது மதத்தின் வேதாகமத்தை
எழுதி முடிக்க வேண்டியிருந்ததால்
புராதன ஞாபகங்களோடு உறங்கப் பழகிக் கொண்டேன்
புராதன ஞாபகமென்பது வேறொன்றுமில்லை
ஒவ்வொரு கணமும் எரியூட்டி
நிகழ்த்திப் பார்க்கப்பட்ட எனது மரணத்தைத் தவிர
–
manomohan1982@yahoo.com