- கோ.கண்ணனின் கவிதைகள்
- தேவிபாரதியின் “பிறகொரு இரவு” நூல் வெளியீட்டு விழா
- கடித விமர்சனம் – 8 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து) நிறைவு
- நல்லி- திசை எட்டும் – மொழியாக்க விருது விழா
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிநான்கு
- பறவையின் இறப்பு
- காட்டுமிராண்டி அரபிகளின் இறை வழிபாட்டினைச் செப்பனிட மட்டுமே….
- இயலாமை
- ஒலி மிகைத்த மழை
- ” புறத்தில் பெருந்திணை “
- வேத வனம் – விருட்சம் 44
- ஊகங்களும் ஊடகங்களும்
- மூன்று கவிதைகள்
- BAR1 invites you to attend its first Salon/open studio Bar 1/4 as part of its INDIA- INDIA residency.
- வலியறிதல்
- இரண்டு கவிதைகள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஆறு
- மூன்று கவிதைகள்
- நிழலின் ஒளி
- மரணத்தைத் தவிர வேறில்லை
- தோற்கப் பழகு!
- இறகுப்பந்துவிடு தூது!
- ஜெயபாரதன் தொடர்கள்
- மறு நிர்மாணப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த தேக்கா ஈரச்சந்தை
- ஆகவே சொல்கிறேன்
- சாங்கியத் தாயும், சாங்கிய மதமும்.
- ஏலாதி சிந்தனைப்பள்ளி தேசிய பல்துறை ஆய்வரங்கம்
- வரவேற்போம், முகம்மது அமீனை.
- வெட்கமற்றது
- மிதித்துச் செல்ல ஓர் இலவச ஆல்பம்
- காணாமல் போனவர்களின் மணல்வெளி
- உயிர் தேடும் வண்ணங்கள்
- கண்டனத்துக்குரிய சில…
- பெரியார் பதிப்புரிமை வழக்கு – ஒரு குறிப்பு
- ஆசை
- screening of the documentary film Out of Thin Air
- மெளன கோபுரம்
- ஆலவாய் – சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்
- நன்றி, மலர் மன்னன்
- பூமி என்னும் வண்ணக்கலவை
- சாகசம்
- இயக்கம்..
- இது பின்நவீனத்துமல்ல
- மொட்டை மாடி
எம்.ரிஷான் ஷெரீப்
மின்னலைப் பார்த்திருக்கும்
விழிகளுக்குச் சலனமேதுமில்லை
அநிச்சையாய் விரல்கள்
பின்னலை அவிழ்த்து மீண்டும் மீண்டும்
பின்னிக் கொண்டேயிருக்கின்றன
தவளைகள் கத்தும் சத்தம்
மழையை மீறிக் கேட்டபடியிருக்கிறது
இலைகள் கோப்பைகளாகி
நீரைத் தேக்குகின்றன
மழை ஓய்ந்த தென்றலுக்கு
பன்னீர் தெளிக்கக்கூடும் அவை
இப்பெருத்த மழைக்கு
கூட்டுக் குஞ்சுகள் நனையுமா
சாரலடிக்கும் போது
கூட்டின் ஜன்னல்களை மூடிவிட
இறக்கைகளுக்கு இயலுமா
மிகுந்த ஒலியினைத் திருத்த
இயந்திரக் கரங்களோடு எவனும் வரவில்லை
இரைச்சல்கள் அப்படியே கேட்டபடியிருக்கின்றன
நீயும்
எதனாலும் காவப்படமுடியாதவொரு
மனநிலையைக் கொண்டிருக்கிறாய்
இறுதிவரையிலும்
உன்னில் அமைதியை ஏற்படுத்த
என்னால் ஆக முடியாமல் போனதைப் போல
-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி – கலைமுகம் இலக்கிய இதழ் – 49 (ஜனவரி – ஜூன், 2009)
mrishanshareef@gmail.com